சுமார் 3 லட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை மீட்டெடுத்துப் புணர்வாழ்வும்,பாதுகாப்பும் அளிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கமும், தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புலி சார்பு இறுதி ஆதரவாளர்களும் பிரச்சாரங்களை முன் வைக்கிறார்கள்.
Tag Archives: அரசியல்
ராஜபக்சாவின் போர்..
அதிகாரங்களை மையப்படுத்தியும், ஆக்கிரமிப்புகளை முதன்மைப்படுத்தியும், ஒரு சில வேளைகளில் காப்பிய நாயகர்கள் மூலம் தர்மத்தை முன்நிலைப் படுத்தியும் பல போர் வரலாற்றுக் காவியங்களை நம் மூதாதையர் வரலாறாகாவும், இலக்கியங்களாகவும், கதைகளாகவும் கேட்டறிந்து வளர்ந்த நம் “அறிவுக்குள்” ராஜபக்சாவின் போரும் புகுந்து கொள்கிறது.
கலைஞர் துரோகமிழைத்தாரா ?
தமிழினத் தலைவனாக அறியப்படும் கலைஞர் துரோகமிழைத்துவிட்டார் என்று உலகத் தமிழர்களில் ஒரு சாரார் (விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்) குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்னொரு சாரார் கருத்தே கூறாமல் இருக்கின்றனர்.
அப்படியானால், இதில் ஏற்கக்கூடியதும் மறுக்கப்பட வேண்டியதும் என்ன? அவர் உண்மையில் துரோகமிழைத்து விட்டாரா?
காசு பார்க்கும் காஸ்பார்
ஜெகத் காஸ்பார் காசு பார்க்கத் துணிந்து விட்டார், துரதிஷ்டவசமாக அவரும் கையிலெடுத்திருப்பது அதே திக்குத் திணறிப்போன “தமிழீழத்தையே”.
ஆனாலும் ஜெகத் காஸ்பார் இப்போதாவது காசு பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது, இதை அவரே கூட மறுக்க முடியாது.
“உயிர்” ஆயுதம்.
இன்னொரு சுற்று ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
அடங்க மாட்டேன் என்று வீராப்புடன் இருக்கும் இலங்கையை அடிபணிய வைத்தே ஆகுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் மேற்குலகின் “மனிதாபிமானப்” போர் மீண்டும் ஆரம்பித்துவிட்டது.
துரதிஷ்டவசமாக மீண்டும் இது “தமிழர்களின் பிணங்கள்” மீது சாய்ந்து நீலிக் கண்ணீர் வடிக்கப் போகிறது.
நல்லிணக்க அமைச்சர் வாய் திறக்கிறார்..
அவரை விநாயகமூர்த்தி முரளிதரன் என்று அறியச் செய்வதற்கு உலகமே படாத பாடு படுகிறது, கருணா அம்மான் என்று சொன்னால் ஆபிரிக்கக் காடுகளிலும் தெரிய வருகிறது.
எனவே, நாமும் இலங்கையில் நல்லிணக்க அமைச்சரை கருணா அம்மான் என்றே விளித்துக்கொள்வோம்.
கருணா அம்மான் எப்போது வாய்திறப்பார்? என்பது நெடுநாளாக நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு விடயம்.
போதுமய்யா போதும் ..!
நெல்லையில் திருமணத்துக்குப் போனீங்க, வயிறு நிறைய சாப்பிட்டு வெத்தலை பாக்குப் போட்டு கையிலிருந்தா மொய் எழுதிட்டு வருவோமா என்றில்லாமல் அங்கேயுமா ஐயா நெடுமாறா?
போதுமய்யா போதும்.. தப்பிப் பிழைத்து வந்திருக்கும் ஈழத்தமிழர்களை அவர்கள் பாட்டில் வாழ விடும்.
நம்பிக் கெட்ட மாவீரர்கள்!
தமிழ்த் தேசியம், தமிழீழம் எனும் கவர்ச்சிகரமான வாதத்தால் உந்தி இழுக்கப்பட்டு, இறுதியில் அதன் தலைமையின் மிக அருகில் இருந்த காவல் தெய்வங்களைத் தவிர, அதற்கு முன்னரணில் இருந்து உயிர் விட்ட பெரும்பாலான துப்பாக்கி வீரர்கள் நம்பிக்கெட்ட மாவீரர்களே.
சில வேளை இந்தத் தமிழ்த்தேசிய வாதம் எங்கே எப்படி அல்லது எதற்காகக் புறப்பட்டது என்பதே அவர்களைப் பொறுத்தவரை கேள்வி ஞானமாக மட்டுமே இருந்திருக்கும்.
துரோகிகளின் பட்டியல் ..
விடுதலைப் புலி ஆதரவாளர்களின் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போகப்போகிறது.
அடுத்து தயா மோகனைத் துரோகியாக்குவதா? இல்லையா என்ற அரை குறைக் குழப்பத்தில் இப்போது புலி ஆதரவாளர்கள் திக்கு முக்காடுகிறார்கள்.
இதுதான்டா அரசியல் !
தலைப்பு ஏதோ டாக்டர் ராஜசேகரின் டப்பிங் படத்தின் தலைப்பு என்று நினைத்துவிடாதீர்கள், இது நிஜத்தில் நடந்தேறியிருக்கும் ஒரு “வரலாறு”.
ஒரு பலவீனமான அரசின் நிழலில் குளிர் காய்ந்து தம் “இருப்பைப்” பாதுகாத்துக்கொண்ட இயக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை நாம் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறோம்.