நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றார்கள் எந்த நாளை என்று இறுதி வரை அவர்களும் சொல்லவில்லை, அதை நம்பப் பண்ணியே அப்பாவி மக்களிடம் கிட்டத்தட்ட 11000 நாட்கள் சோறும், நீரும், இரத்தமும், சதையும், கள்ளும்,புல்லும் அவர் வீட்டுக் கதவு,ஜன்னல்,கூரைகளையும் பிடுங்கித் தின்று ஏப்பம் விட்டு இப்போது நீட்டப்பட்டிருக்கும் இராணுவத் துப்பாக்கிகள் முன், மூடப்பட்டிருக்கும் வேலி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
Tag Archives: அரசியல்
சமத்துவமா? அடிமைத்தனமா?
சமத்துவமா? அடிமைத்தனமா? இந்த இரண்டில் ஒன்றைத் தெரிவு செய் என்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? எனும் சந்தேகம் பெரும்பாலானோர் மனதில் ஏதாவது ஒரு மூலையில் தேங்கிக் கிடக்கிறது.
இந்த சந்தேகம் வெளிநாட்டில் இருப்போரின் வெளிமனதிலும், உள் நாட்டில் இடைத்தங்கல் முகாம்களில் இன்று தவிக்கும் மக்களின் ஆழ் மனதிலும் நி்ச்சயம் இருக்கக்கூடும்.
பிரபாகரனே அத்தனைக்கும் காரணம்!
சொல்வது நாமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தமிழ் இணையம் ( புதினம் ).
எழுதியதும் நாமல்ல, நடேசன்,பாலசிங்கம்,தமிழ்ச் செல்வன் மற்றும் இன்ன பிற புலி முக்கியஸ்தர்களின் நெருங்கிய சகா “வழுதி”.
வழுதி இப்போது கிளப்பும் இந்தப் புழுதியை தமிழினத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் எப்போதே கிளப்பியிருந்தார்கள், என்ன செய்ய? ஏற்றுக்கொள்ளத்தான் அவர்களுக்கு மனம் இருக்கவில்லை.
இப்போது காலங் கடந்து விட்டது, இதைத் தான் கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்றும் சொல்வது.
கேப்டன் “கருணா நிதி”
புலியின் முகத்தில் சாணியடித்தே தீருவது என்பதில் முழு உலகமும் எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறது என்பதை இறுதியில் கலைஞரிடம் “வணங்கிய மண்” தெளிவு படுத்தியிருக்கிறது.
இன விடுதலையா? போராட்டமா? இன உணர்வா? அதெல்லாம் அவர்களிடம் எங்கே இருந்தது? என்று ஒவ்வொரு புலி ஆதரவாளரும் தம்மைத்தாமே கேள்வி கேட்க அவர்கள் நிர்ப்பந்திக்கப்படும் வகையில் உலக அரசியல் நடந்தேறுகிறது.
பிரபாகரன் – The End.
கடந்த ஒரு மாத காலமாக யார் சொன்னாலும் கேட்கவில்லை, அடம் பிடித்தார்கள்.
அடப்பாவிகளா (ஆகக்குறைந்தது) உங்களை 30 வருட காலங்களாக வழிநடத்திய ஒரு தலைவன், அவனுக்கு ஒரு அஞ்சலியாவது செலுத்துங்கள் என்று எத்தனை விதத்தில் எத்தனை பேர் எத்தனை இணையங்களில் கேட்டுக்கொண்டாலும் அவர்கள் அடங்கவில்லை.
பிரபாகரனின் கனவு நிறைவேறுகிறது!
தலைவர் சும்மாவா இருந்தார்? 30 வருடங்கள் அல்லவா போராடினார்? என்னே போராட்டம், இப்போதுதான் ஒரு வழியாக அவரது கனவுகள் நிறைவேறிக்கொண்டு வருகின்றன.
தலைவனின் விசுவாசமிக்க தொண்டன் “கே.பி அண்ணா” முதல் பத்தில் இல்லாவிடினும் பின் வந்த இரண்டு பத்து ஆண்டுகளிலும் தலைவர் முழு மூச்சாகக் கண்ட கனவினை நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார், இதைவிட வேறு என்ன வேண்டும்?
வேட்டை முடிந்து விளையாட்டு..
புலியின் சித்தார்ந்தம் இலங்கை மக்களுக்குச் செய்த அட்டூழியங்களைக் கூட்டிக்கழித்துப் பார்க்கும் ஒவ்வொருவரும், புலி அழிந்தே ஆக வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.
ஆனாலும், புலி செய்ததற்கு சரி சமமாக மக்களை வதைக்கும் இன்னும் எந்த சக்தியையும் அனுமதிக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை மறுக்கக் கூடாது.
இன்றையே தேதியில், இடம்பெயர்ந்தோர் தங்கு முகாம்களில் புலி வேட்டையின் பின்னான விளையாட்டுக்கள் பற்றிய எமது ஆதங்கம் இது.
தமிழ்ச்செல்வனுமா துரோகி?
என்னதான் உண்மையை மறைத்தாலும் என்றாவது ஒரு நாள், அதுவும் ஆகக்கூடியது கார்த்திகை 27ம் நாளுக்கு முன்னர் விரும்பியோ விரும்பாமலோ வாந்தியெடுத்தே ஆக வேண்டிய கட்டாய நிலை புலிப்பினாமிகளுக்கு இருக்கிறது.
மெல்ல, மெல்ல உண்மைகளைக் கக்குவார்கள் என்பது புலியையும் அவர்களது, பிரச்சார தர்மங்களையும் அறிந்த அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இது எல்லை மீறிய ஒன்றாக இல்லையா?
தமிழ்த்தேசியம் !?
ஒவ்வொரு தமிழர் உணர்வோடும் விளையாடக்கூடிய மிகக் கூரிய ஆயுதமான “தமிழ்த் தேசியம்” எனும் சொற்பிரயோகத்தை பல தரப்பட்ட மனிதர்களும், பல தரப்பட்ட கோணங்களில், சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தமிழ்த் தேசியம் எனும் சொற் பிரயோகம் இரண்டு வகைப்படுகிறது.
ஜன் ஜனநாயகமும் தோற்றார்..
ஸ்டைலுக்காகத்தான் அவர் ஜன்.. உண்மையில் அவர் ஜனனி.. இதுதான் அவரது ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்ட ஆறுதலான விபரம்.
விபரம் தெரியாத சின்னப்பொண்ணு புலிகளின் வலையில் வீழ்ந்தது என்பதா இல்லை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஜன் அன் கோ தமிழ் மக்கள் மீது சவாரி செய்ததா என்பது நாளடைவில் அறிந்து கொள்ளக் கிடைக்கக்கூடிய விடயங்கள்.