நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை, அதைத் திணிக்கும் உரிமையும் எவருக்கும் இல்லை, அதே நேரம் நம்புவோரைத் தூற்றும் உரிமையும் “அந்த சிலருக்கு” இல்லை.
மனித உரிமை, மண் உரிமை மற்றும் சுயாட்சி உரிமை பற்றிப் பேசுவதெற்கெல்லாம் முன்பாக தன்னைத் தவிர்ந்த இன்னொருவரின் கருத்துக்களையும், உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக்கொள்வதே அப்பேற்பட்டவர்களின் அடிப்படைத் தேவையாகும்.