இலங்கை மக்களைப் பார்த்து, “சிலோன் காரன்” என்று வெளிநாட்டு மக்கள் அடையாளப்படுத்தும் போது, அதை ஓரளவுக்கு எல்லோருமே பெருமையாகத்தான் நினைத்திருந்தார்கள்.
பின்னர் வந்த இலங்கையும்,தமிழீழமும் மக்களையும் பிரித்து, நம்மீது அக்கறை கொண்டிருந்த பிற நாட்டு மக்கள் உணர்வுகளையும் சேர்த்துத்தான் பிரித்தன.
அதற்காகத் திரும்பவும் இலங்கையை சிலோன் ஆக்க முடியாது, ஆனால் பிரிந்து போன மனித உள்ளங்களை முயற்சித்தால் மீண்டும் இணைத்துக்கொள்ளலாம்.