இன்னொரு சுற்று ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
அடங்க மாட்டேன் என்று வீராப்புடன் இருக்கும் இலங்கையை அடிபணிய வைத்தே ஆகுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் மேற்குலகின் “மனிதாபிமானப்” போர் மீண்டும் ஆரம்பித்துவிட்டது.
துரதிஷ்டவசமாக மீண்டும் இது “தமிழர்களின் பிணங்கள்” மீது சாய்ந்து நீலிக் கண்ணீர் வடிக்கப் போகிறது.