வண்டிச் சில்லில் அகப்பட்ட பழைய சேலைத் துண்டு போல துப்பாக்கி முனையில் அகப்பட்டுத் தத்தளித்து இழு இழு என இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவிகளின் மரணத்திலும் இன்று “உலக அரசியல்” நடைபெறுவதைப் பார்க்கும் போது “மனிதம்” எனும் வார்த்தைக்கே அர்த்தமிருக்கிறதா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.
Daily Archives: மே11, 2009
மக்களும் இல்லை மாக்களும் இல்லை.
க.கோ.ச கூட்டணிக்கே வெற்றி !
தி.மு.க,அ.தி.மு.க,தே.மு.தி.க,ம.தி.மு.க,பா.ம.க,ல.தி.மு.க,இ.க,இ.ம.க, பா.ஜ.க என்று பல “க” கள் நடிக்கும் “தேர்தல் 2009” வெள்ளோட்டம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
8 கோடி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கையிலெடுப்பதை விடுத்து அவர்கள் சிந்தனைகளை எதைக்கொண்டாவது திசை திருப்பி நாற்காலியில் இன்னொரு நாலு வருடம் இருக்காமல் ஓய்வதில்லை என்ற பொது உடன்பாடு அனைத்துக் கட்சிகளிடமும் இருக்கிறது.
ஒன்றுமே இல்லாவிட்டால் ரஜினி காந்தின் பன்ச் டயலாக் ஒன்றை வைத்தாவது தம் அரசியல் பலப் பரீட்சையில் மக்களை மடையர்களாக்கிவிடலாம், எதற்குமே பஞ்சமில்லை எனவே இந்தத் தடவை ஈழ பலூனை ஊதிப் பார்த்த கணக்கும் அரசியல் கணக்கில் செலவு வைக்கப்படுகிறது.