<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>அறிவென்றொன்று...!?</title>
	<atom:link href="http://arivudan.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://arivudan.wordpress.com</link>
	<description>உண்மைகளை உரக்கச் சொல்வோம் !</description>
	<lastBuildDate>Tue, 26 Apr 2011 10:41:13 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='arivudan.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>அறிவென்றொன்று...!?</title>
		<link>http://arivudan.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://arivudan.wordpress.com/osd.xml" title="அறிவென்றொன்று...!?" />
	<atom:link rel='hub' href='http://arivudan.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் !</title>
		<link>http://arivudan.wordpress.com/2011/04/26/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2011/04/26/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Tue, 26 Apr 2011 10:41:07 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[தமிழீழம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[புலிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=480</guid>
		<description><![CDATA[மனித நேயத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தூரத்தை மீண்டும் ஒரு தடவை உலக வரலாறு அலசி ஆராய்வதற்கு ஏதுவாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஐ.நா வாய் திறந்திருக்கிறது. நல்லதோ கெட்டதோ, இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்று புனிதப் போர்வைகள் களையப்பட்டு புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதை மனித நேய அபிமானிகள் எவ்வாறு நோக்கப்போகிறார்கள்? இனி வரும் காலத்தில் புலிப் பிரச்சாரத்திற்கும் சிங்க மழுப்பல்களுக்கும் இடையில் அப்பாவி உயிர்கள் எவ்வாறு உதை படப் போகின்றன என்கிற புதிய அத்தியாயத்தை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=480&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">மனித நேயத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தூரத்தை மீண்டும் ஒரு தடவை உலக வரலாறு அலசி ஆராய்வதற்கு ஏதுவாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஐ.நா வாய் திறந்திருக்கிறது.</p>
<p style="text-align:justify;">நல்லதோ கெட்டதோ, இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்று புனிதப் போர்வைகள் களையப்பட்டு புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதை மனித நேய அபிமானிகள் எவ்வாறு நோக்கப்போகிறார்கள்? இனி வரும் காலத்தில் புலிப் பிரச்சாரத்திற்கும் சிங்க மழுப்பல்களுக்கும் இடையில் அப்பாவி உயிர்கள் எவ்வாறு உதை படப் போகின்றன என்கிற புதிய அத்தியாயத்தை ஐ.நா உபயத்தில் நாம் காணப்போகிறோம்.<span id="more-480"></span></p>
<p style="text-align:justify;">அவன் பிடித்து வைத்தான், அதை மீட்பதற்காக நாங்கள் எதிரியை வலுவிழக்கச் செய்யப் போராடினோம், அப்போது இவ்வாறான &#8220;துன்பியல்&#8221; சம்பவங்கள் நிகழ்ந்தன என புலிப்பாணியிலேயே இனி வரும் காலத்தில் சிங்கக் குகைக்குள் இருந்து அறிக்கைகள் வெளி வந்தாலும் ஆச்சரியமில்லை.</p>
<p style="text-align:justify;">பிரபாகரன் தன் உயிர் அடங்கும் வரை மக்களைப் பலி கொடுத்ததும் மிகப் பெரும் உண்மை, அதை நாம் அப்போதே சுட்டிக்காட்டினோம், இன்று ஐ.நாவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இருந்தாலும் உறங்கிக்கிடந்த புலிப்பினாமிகளும் விசைப்பலகை வீரர்களும் மீண்டும் துயிலெழுந்து தம் ஆக்ரோஷம் அடங்கும் வரை இணையமெங்கும் முழங்கித் தள்ளப்போகிறார்கள்.</p>
<p style="text-align:justify;">தமிழ் நாட்டின் புலிப் பிரச்சாளர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று கச்சையைக் கட்டிக்கொண்டு கிளம்புவார்கள், சீமான்கள் மிஞ்சப்படுவார்கள். உணர்வு எனும் பெயரில் கருணானிதியை வாரிக் கொட்டப்போகிறார்கள், அதற்குள் சத்தமே இல்லாமல் தேர்தல் முடிவுகள் வந்து மீண்டும் கலைஞர் ஆட்சி வந்தால்?? அதில் 80 விழுக்காட்டினர் அடங்கிக்கொள்வார்கள்.</p>
<p style="text-align:justify;">ஆக, அப்பாவி மக்களின் உயிரை வைத்து மீண்டும் நாறிப்போன அரசியலை தூசு தட்டக் காத்திருந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஐ.நா உபயத்தில் பெரும் பயன் கிடைத்திருக்கிறது.</p>
<p style="text-align:justify;">இது வெறும் அறிக்கையாகப் பார்க்கப்பட முடியாத கோரம், தம்மால் எதுவுமே செய்ய முடியாமல் அப்பாவிகளாக உயிரை நீத்த ஆயிரமாயிரம் மக்களின் சாபம் சரி சமமாகப் புலிக்கும் சிங்கத்துக்கும் போய் சேரும். எனினும், ஒரு அரசாங்கம் எனும் ரீதியில் புலியை விட ராஜபக்சாக்களுக்கு பொறுப்பு அதிகமாக இருந்திருக்க வேண்டும், நாளை சிறையிலிருந்து சரத் பொன்சேகாவும் அப்ரூவராக மாறினால் சர்வதேச நெருக்கடி இலங்கை அரசுக்கு இன்னும் அதிகரிக்கும்.</p>
<p style="text-align:justify;">புலியின் மிகக் கேவலமான யுத்த தர்மம் தான் இதற்கு வழி வகுத்தது என்றாலும் கூட, அதை மீறுவதற்கு, அதுவும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் மீறுவதற்கு எடுத்துக்கொண்ட பகீரத பிரயத்தனத்தை இந்தியாவோ, சீனாவோ, ரஷ்யாவோ, பாகிஸ்தானோ அறியாமல் இருந்தது என்று யாரும் கூற முடியாது. இந்நாடுகளுக்கு இது ஏற்கனவே தெரிந்த விடயம். எனவே, இனி வரும் எதிர்ப்பை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பில் தம் கவனத்தைச் செலுத்துவதோடு முன்னையை விட மிகப் பலமான உறவுகளை இந்நாடுகளோடும், ஏகாதிபத்திய அமெரிக்காவையும் அதன் ஐரோப்பிய சகபாடிகளையும் எதிர்க்கும் அத்தனை நாடுகளோடும் தம் வலுவாகப் புதுப்பித்துக் கொள்வதில் இலங்கை மும்முரமாக ஈடுபடும்.</p>
<p style="text-align:justify;">ராஜபக்சாக்கள் அனுபவித்து வந்த சுக போகத்திற்கு இது ஒரு தடைக் கல் என்பது ஒரு புறமிருக்க, இதைப் பெரும் முட்டுக்கட்டையாக வளர விடாமல் தடுப்பதில் அவர்களும், இதையே பாவித்து ஆகக்குறைந்தது போர்க்குற்றம் புரிந்தோராக அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதும், அந்த நெருக்கடியைச் சமாளிக்க அவர்கள் விரிக்கும் வலையில் விழும் பிரச்சாரப் புலிகளும் என்று புதுமையான கோமாளித்தனங்களும் எதிர்காலத்தில் அரங்கேற வாய்ப்புகள் உண்டு.</p>
<p style="text-align:justify;">நாஞ்சில் சம்பத்தோ, ராமதாசோ இல்லை யார் யார் சொன்னாலும் கூட தனித் தமிழீழம் என்பது உலக அரங்கில் சாத்தியமில்லாத விடயம் என்பதில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர் தெளிவாக இருந்தாலும் கூட உருத்திர குமரர்களுக்குத் தம் பிரச்சாரத்தை முடுக்கி விட இதுவொரு நல்ல வாய்ப்பு என்பதும் மறுப்பதற்கில்லை, அவர்கள் இத்தருணத்தைப் பாவித்தாலும் இல்லாவிட்டாலும் ராஜபக்சாக்கள் புனிதர்கள் இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.</p>
<p style="text-align:justify;">இப்படி இரு சாராரும் ஒரே கூண்டில் இணைந்ததனால் நாம் கண்ட ஒரே விளைவு அப்பாவி மக்களின் இன்னுயிர்கள் புலியால் சிறை பிடிக்கப்பட்டு சிங்கத்தால் கடித்துக் குதறப்பட்டதுதான்.</p>
<p style="text-align:justify;">இந்த உண்மை அனைவருக்கும் தெரியும், உண்மையான போராளிகள் அதுவும் மக்களுக்காகப் போராடும் போராளிகளாக இருந்திருந்தால் முதலில் தாம் உயிர் நீத்தாலும், அந்த மக்களை வாழ வைக்க வழி செய்திருக்க வேண்டும், ஆனால் இங்கு அது மாறித்தான் நடந்தது. புலித் தலைவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், பொது மக்கள் அரணைக் கடந்து வர அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதன் மூலம் அழுத்தங்களைப் பிரயோகித்து இன்னொரு முறை யுத்தத்தை நிறுத்தி, அடங்கிப் பின் வேறு வழிகளில் வீராவேசம் பேசவும் போட்ட திட்டத்திற்கு முன்னால், ராஜபக்சாக்கள் மக்கள் அரணை உடைத்தெறித்து அதையும் புலியின் தலையில் கட்டி விட்டுத் தப்பி விடலாம் என்று திட்டமிட்டு விட்டார்கள்.</p>
<p style="text-align:justify;">இதில் புலிகள் மடிவது ஏறத்தாழ உறுதியாகவே இருந்த போது, இதன் பின் விளைவுகளைச் சமாளிக்கும் காரணிகளை வலுப்படுத்தும் அரசியல் தேவை அரசாங்கத்திற்கு அப்போதே இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. அவ்வாறான கட்டத்தில் கேடயமாக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பலியெடுத்த கொடூரம் சர்வதேச அளவில் வெடிக்கும் போது அதைச் சமாளிப்பதற்கும் தம் மீது சுமத்தப்படும் குற்றத்தை வேறு ஒருவர் மீது திசை திருப்புவதற்கும் அல்லது ஏற்கனவே ராஜபக்சாக்கள் தயாராகத்தான் இருப்பார்கள். அது எவ்வாறு அரங்கேறப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</p>
<p style="text-align:justify;">உணர்வுபூர்வமாக, மனிதாபிமானத்துடன் இவ்விடயத்தை நோக்குவோர் புலியையும் சிங்கத்தையும் ஒரே கூண்டில் வைத்துத்தான் பார்ப்பார்கள். புலியின் பிடியில் இருந்து தப்பி வந்தவர்களின் சாட்சியங்கள் அதைத்தான் வலியுறுத்தி நிற்கின்றன.</p>
<p style="text-align:justify;">எனினும், ஏகாதிபத்திய சார்பு நிலை கொண்ட எதிர்க்கட்சியும், பிராந்திய வல்லரசுகளின் துணையோடு நிலைத்து நிற்கும் ஆளும் கட்சியும் உள்ளூரிலும், வெளியூரிலும் நிகழ்த்தப்போகும் சாகசங்களிலும், அமெரிக்க நலன்கள் சரிபார்க்கப்பட்டு அவை ஈடு செய்யப்படும் விதத்திலும் ஒரு வேளை இந்த சத்தங்கள் மீண்டும் சுனாமியாக எழுந்து ஓய்வு பெறலாம்.</p>
<p style="text-align:justify;">எது எப்படியானாலும், தம் உறவுகளைத் தொலைத்து விட்டு அல்லலுறுவோருக்கு யாரும் ஆறுதல் சொல்லப் போவதில்லை. அவர்களும் அதை வெளியில் பேசுவதனால் இருக்கப்போகும் சிக்கல்களை விட தமக்குள்ளேயே வைத்து அடக்கிக் கொள்வதைப் பெரிதும் விரும்புவார்கள்.</p>
<p style="text-align:justify;">ஒவ்வொரு காலத்திலும், அப்பாவி மக்களின் துயரை அடிப்படையாக வைத்து, உள்ளூரிலும், வெளியூரிலும் அரசியல் வாதிகள் நன்மையடைகிறார்களே தவிர, இந்த மக்களுக்கு அவரவர் உறவினர்களும் அவரவர் சொந்தக் கை கால்களும் மட்டுமே உதவியாக இருக்கின்றன எனும் உண்மையை அவர்களைத் தவிர வேறு யாருக்கும் உணர்வுபூர்வமாக விளக்குவதும் கடினம்.</p>
<p style="text-align:justify;">சர்வதேச அரங்கில் கீர்த்தி மிக்க நாடாக இலங்கை மாற வேண்டுமானால் அதற்குப் பாசிசப் புலியின் இருப்பு இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலானோருக்கு ஒத்த கருத்தே இருந்து வந்தது, அதிலும் குறிப்பாகப் புலியின் குணம் அறிந்ததனால் புலி மனிதக் கேடயமாக மக்களை லட்சக்கணக்கில், ஆயுத முனையில் அடக்கி வைத்திருந்தார்கள் என்பதிலும் பெரும்பாலானோருக்கு மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.</p>
<p style="text-align:justify;">என்ன பாடு பட்டாவது புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதியே ஆக வேண்டும் எனும் பின்புலத்தில் புலியின் கைங்கரியத்தை புலியின் முடிவிலேயே முடித்து விடும் நோக்கில் செயற்பட்ட ராஜபக்சாக்கள் மக்களை அழித்தார்கள் என்பதை விட புலிகள் பலி கொடுக்கிறார்கள் எனும் எண்ணமும் மேலோங்கியிருந்ததனாலும், மக்களுக்காக ஒப்பாரி வைக்கத்தவறிய புலி ஜாம்பவான்கள், ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்து கொண்டிருந்த போதும் கூட, அத்தனை பேருக்கும் பின்னொரு காலத்தில் மாவீரர், தியாகிப் பட்டங்களைக் கொடுத்து விடலாம் ஆனால் இப்போதைக்குப் பிரபாகரனைக் காப்பாற்றியாக வேண்டும் என்று துடிப்பாக செயற்பட்டதனாலும், பொதுவாக இது தொடர்பில் எந்த நிலையில் இதை முன் நிறுத்துவது எனும் குழப்பம் மனிதநேயர்களிடம் இருந்து வந்திருந்தது.</p>
<p style="text-align:justify;">அரசு எனும் ரீதியில் பொறுப்பு இருந்திருக்க வேண்டும் என்னும் ஒரு பார்வையில் இந்த அரசின் கொடூரத்தை கண்டிக்கவும், புலியின் கைங்கரியத்தை ஒரே தட்டில் வைத்துக் கண்டிக்கவும் இனி மேலும் யாரும் தயங்க முடியாது. இன்றைய நிலையில் ஏறத்தாழ சுயேச்சையாக தாம் விரும்பும் எதையும் செய்யும் எதோச்சாதிகார அரசாகவும், பண மாற்றீடின் மூலம் ஏழைகளுக்குத் தற்காலிக சுகபோகத்தினை வழங்கி அவர்களின் நீண்ட கால உரிமைகளை அடக்கும் புதிய கம்யுனிசப் பங்காளிகளாகவும் மாறிச் செயற்படும் ராஜபக்சா அரசு கண்டிக்கப்படவே வேண்டும் !</p>
<p style="text-align:justify;">அன்று புலிகளுக்கும், இன்று ராஜபக்சாக்களுக்கும் என்று நிலைகளை மாற்றிக்கொண்ட அரசியல் கூட்டணிகள், அமைப்புகள், முன்னாள் ஆயுதக்குழுக்கள் எல்லாம் இனி என்ன சொல்லப்போகின்றன என்பதை கணிக்க முடியாதவராக இருக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு இலங்கையருக்கும் யுத்த அனுபவம் இருப்பதனால் இதை அப்பாவி மக்கள் அடையாளங்கண்டு கொள்வார்கள்.</p>
<p style="text-align:justify;">தற்போது வெளிக்கிளம்பியிருக்கும் பூதம் புலியையும் சிங்கத்தையும் ஒரே கூண்டில் வைத்திருப்பதனால், இனி வரும் சில காலங்களுக்கு இது &#8220;அரசியல்&#8221; பிரச்சினையாக இருக்குமே தவிர மக்களின் பிரச்சினையாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.</p>
<p style="text-align:justify;">இது மக்கள் பிரச்சினையாக மாற்றப்பட்டு, மக்களுக்குப் பதில் சொல்லும் நிலைக்கு அரசு தள்ளப்படுவதற்கு ஏற்ற சூழ் நிலை இலங்கையில் இல்லவும் இல்லை, மத்திய கிழக்கில் போன்று ஒன்றிணைந்து எழுந்து நின்று அமைதிப் புரட்சிகளை ஒருங்கிணைக்கும் ஜனநாயக சக்திகளும் இலங்கையில் இல்லவே இல்லை.</p>
<p style="text-align:justify;">முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சியும், தேசிய வாதமும், சிதறிப் போன சிறுபாண்மையும் மற்றும் ஆப்பிழுத்த இந்தியாவும், ஆதரவுக்கரம் கொடுக்க சீனாவும் ரஷ்யாவும் என்று இலங்கையைச் சுற்றிக் காணப்படும் சிக்கலான அரசியலை மீறி, மேற்குலகம் செய்யப்போகும் பகீரதப் பிரயத்தனத்தின் பெறு பேறும் கூட அப்பாவி மக்களுக்கு எந்த வகையிலும் சந்தோஷத்தையோ அல்லது ஒரு விடிவையோ தரப்போவதில்லை. மாறாக அரசியல் சதுரங்கத்தில் புதுமையான முடிவுகளும், விந்தையான விளக்கங்களும் வந்து சேர்ந்து அவ்வப்போது மக்கள் உணர்வுகளை தட்டிச் செல்லப் போகின்றனவே தவிர, இதில் நன்மை தீமை என்னவோ அரசியலோடு முடிந்து விடப் போகிறது.</p>
<p style="text-align:justify;">எது எப்படியாகினும், தூண்டியவன் குற்றவாளியா அல்லது தூண்டப்பட்டதனால் கொன்றவன் குற்றவாளியா எனும் நியாயங்களும், விளக்கங்களும் வந்து மக்கள் செவிகளை நிரப்பப் போவதையும், இறுதியின் அன்றைய குற்றவாளிகளும் இன்றைய குற்றவாளிகளும், களங்கமற்றவர்கள் எனத் தம்மை நிரூபித்துக் கொண்டு அரியாசனங்களில் தம் அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யப் போகிறார்கள் எனும் முன்னெச்சரிக்கையோடு நாம் இருப்பது நலம்.</p>
<p style="text-align:justify;">இலங்கை அரசு தம் பொறுப்பற்ற அத்து மீறல்களை ஒத்துக் கொள்ளவும் வேண்டும், புலிப் பினாமிகள் தம் தலைமை செய்த தவறை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இதுவே மனித நேயர்களின் விருப்பமாக இருப்பினும், இது இரண்டும் நடந்தால் யார் குற்றவாளி என்று யார் தீர்மானிப்பார்கள்? எனவே, இரண்டுமே நடக்கப்போவதில்லை.</p>
<p style="text-align:justify;">ஆகக்குறைந்தது ஆயுதமேந்திய காட்டு மிராண்டிகள் அனைவரும் ஒரே வகையினர் என்பதையாவது வரலாறு மீண்டும் நிலை நிறுத்திக்காட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சியுடன் எச்சரிக்கையடைந்து கொள்வோம்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/480/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=480&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2011/04/26/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>விஜயகாந்த் Vs வடிவேலு</title>
		<link>http://arivudan.wordpress.com/2011/03/04/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-vs-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2011/03/04/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-vs-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 04 Mar 2011 12:16:56 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=468</guid>
		<description><![CDATA[தமிழகத்தில் மீண்டும் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது, யாரோடு யார் கூட்டணி சேர்வார் எனும் கணக்கெடுப்புகளும் ஊகங்களும் &#8220;பண்ட&#8221; மாற்றங்களும் கூட வெகு விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்க, எப்படியாவது விஜயகாந்தை ஒரு கோமாளியாக்கியே தீர வேண்டும் என்பதிலும் பிரதான கட்சிகள் முழு மூச்சுடன், திரை மறைவில் செயற்படுகின்றன. விஜயகாந்த் அரசியல் கட்சியே ஆரம்பித்திருக்கவில்லையென்று வைத்துக்கொண்டாலும், திடீரென ஒரு தேர்தலில் அதுவும் ஈழத்தமிழர்களின் வாக்கெடுப்பில் நடந்திருந்தால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் ஏன் என்றே கேள்வி கேட்காமல் விஜயகாந்தை &#8220;விரும்பி&#8221; [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=468&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"><a href="http://arivudan.files.wordpress.com/2011/03/vadivel.jpg"><img class="size-full wp-image-473" title="Vadivel" src="http://arivudan.files.wordpress.com/2011/03/vadivel.jpg?w=500&#038;h=300" alt="" width="500" height="300" /></a></p>
<p style="text-align:justify;">தமிழகத்தில் மீண்டும் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது, யாரோடு யார் கூட்டணி சேர்வார் எனும் கணக்கெடுப்புகளும் ஊகங்களும் &#8220;பண்ட&#8221; மாற்றங்களும் கூட வெகு விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்க, எப்படியாவது விஜயகாந்தை ஒரு கோமாளியாக்கியே தீர வேண்டும் என்பதிலும் பிரதான கட்சிகள் முழு மூச்சுடன், திரை மறைவில் செயற்படுகின்றன.</p>
<p style="text-align:justify;">விஜயகாந்த் அரசியல் கட்சியே ஆரம்பித்திருக்கவில்லையென்று வைத்துக்கொண்டாலும், திடீரென ஒரு தேர்தலில் அதுவும் ஈழத்தமிழர்களின் வாக்கெடுப்பில் நடந்திருந்தால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் ஏன் என்றே கேள்வி கேட்காமல் விஜயகாந்தை &#8220;விரும்பி&#8221; வெற்றி பெறச்செய்திருப்பார்கள்.<span id="more-468"></span></p>
<p style="text-align:justify;">அந்த அளவுக்கு அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க முன்பே ஈழ மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு மனிதனாக விஜயகாந்த் இருந்தமைக்கு மிகப்பிரதானமான காரணம் திரை மறைவில் அவர் செய்து வந்த நற்காரியங்களும், ஈழப்போராட்டத்தின் உணர்ச்சி மிக்க கால கட்டங்களில் மேடை போட்டு இல்லையாகிடினும் உணர்வுடனும், மனிதநேயத்துடன் அவ்வப்போது &#8220;குரல்&#8221; கொடுத்திருந்தார் விஜயகாந்த்.</p>
<p style="text-align:justify;">எனினும், அரசியல் என்று வந்தவுடன் மேலோங்கி நிற்கும் பிரதான கட்சிகளின் ஈழ உணர்வு நாடகத்துக்கு முன்னால் எடு பட முடியாத நிலையில் அவர் தன் &#8220;குரலை&#8221; அடக்கியே வைத்துக்கொண்ட பரிதாபம் பிரபாகராயிச முடிவு நெருங்கிக்கொண்டிருந்த கால கட்டங்களில் காணக்கிடைத்த பரிதாபம்.</p>
<p style="text-align:justify;">இதையும் விட பரிதாபத்தினை ஏற்கனவே &#8220;புலிகள்&#8221; அதாவது தென்னிந்திய அரசியலில் &#8220;தமிழர்கள்&#8221; என்று தனியடையாளம் வழங்கப்பட்ட மாமனிதர்கள் விஜயகாந்திற்கு பிரிட்டனில் வழங்கியிருந்தார்கள்.</p>
<p style="text-align:justify;">தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்தபோது அவரால் மேற்கொள்ளப்பட்ட உலக சுற்றுப் பயணத்தில் பிரிட்டனில் கிடைத்தது போன்ற &#8220;அடியும் &#8211; இடியும் &#8221; அவருக்கு எங்குமே கிடைத்திருக்காது, அந்த அளவு அவரை நம்பி பணத்தைப் போட்டவர்களையும் நட்டமடைய வைத்து, அவரையும் நட்டப்படுத்தி, வந்திருந்த மிக முக்கிய நடிகைகள் சிலரை விபச்சாரிகளாகவும் ஆக்க முனைந்து அழகு பார்த்தார்கள் மாமாப் புலிகள்.</p>
<p style="text-align:justify;">இத்தனைக்குப் பின் சென்றும் கூட தன் முன்னைய பணிகளை செய்து வந்தவரும், திரை மறைவில் கிள்ளியாவது கொடுத்து மக்கள் பணி செய்தவரும், பின் சரியான தருணத்தில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவருமாக இருந்த விஜயகாந்தின் சரிவும் செறிவும் என்பது வேடிக்கை கலந்த வினோதமாக மாறி வருகிறது.</p>
<p style="text-align:justify;">இதற்குள் வடிவேலுவையும் இழுத்துப்போட்டு விஜயகாந்தை ஒரு கோமாளியாக்க முயற்சிக்கிறது தமிழகத்தின் &#8220;மூத்த&#8221; அரசியல்.</p>
<p style="text-align:justify;">தன் பாட்டில் தன்னை வருத்தியாவது பிறரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் வடிவேலுவையும் அவர் கலைத்துறையையும் சேர்த்தே சாகடிக்க முயலும் தீவிரம் பெரிய கட்சி அரசியலின் பின்னணியிலிருந்து வருவதை யாரும் மறுக்கப்போவதில்லை.</p>
<p style="text-align:justify;">கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைக் கூறியதோடு நிற்காமல் தற்போது கறுப்புக்கண்ணாடியும் அணிந்து வலம் வரும் அ.தி.மு.க நண்பனாகிக்கொண்டிருக்கும் விஜயகாந்தை, எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் கறுப்பு எம்.ஜி.ஆராக ஏற்றுக்கொள்கிறார்களா என்று &#8220;வெடியை&#8221; வடிவேலு மூலம் வீச வைத்து அழகு பார்க்கின்றன ஊடகங்கள்.</p>
<p style="text-align:justify;">அந்தக் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது, இன்னொரு எம்.ஜி.ஆர் என்பது ஒரு பிரதி வடிவமே தவிர அதன் மூலமாக இருக்க முடியாது. எனினும், விஜயகாந்த் இன்று தன் மேலிருக்கும் நம்பிக்கையை இழந்து, ஏற்கனவே எம்.ஜி.ஆர் தயவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒரு பங்காளியாகும் தேவை வந்திருப்பது ஏன் என்று பார்க்குமிடத்து, மீண்டும் பிரதான கட்சிகளிடம் சிறு கட்சிகள் தம்மை அடகு வைக்கும் நிலையைப் பெருந்தலைகள் தக்க வைத்துக்கொள்கின்றமை கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.</p>
<p style="text-align:justify;">இரு கட்சி அரசியலின் நடுவே தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பங்கீட்டு அளவுகோளுடன் சிறு கட்சிகள் திருப்திப்பட்டுக்கொள்வதுவே அக்கட்சிகள் இரு பெரும் கட்சிகளை மிஞ்சி வளர முடிவதில்லையா எனும் கேள்வி ஒரு புறமிருக்க, தமது கட்சியின் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஆகக்குறைந்தது ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மாறி தலையிடி கொடுப்பதன் மூலமாவது தம்மைப் பலப்படுத்திக்கொள்ளலாம் எனும் கனவு கண்ட ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் வரிசையில் விஜயகாந்தின் கட்சியும் இணைந்து கொள்கிறதா எனும் பக்கமும் கேள்வியோடு காத்திருக்கிறது.</p>
<p style="text-align:justify;">கலைஞர், ஜெயலலிதா எனும் இரு பெரும் &#8220;தலைகள்&#8221; இருக்கும் வரை அரசியல் பக்கம் தலை வைத்துப் படுப்பதும் கூட தனக்குத் தேவையில்லாத விடயமென்று ஒதுங்கியிருக்கும், விஜயகாந்தை விட &#8220;மாஸ்&#8221; அதிகமாகவிருக்கும் ரஜினி போன்றவர்களையும் தாண்டிய விஜயகாந்தின் வருகையானது ஒரு மாபெரும் எதிர்பார்ப்பையும், அலையையும் உருவாக்கியிருந்தாலும், பின்நாளில் &#8220;தோல்விகள்&#8221; மூலம் தோய்வடைந்து போன நிலையில் இன்று சரணாகதியாகுவதில் மும்முரமாக இருப்பது வேதனைக்குரியது.</p>
<p style="text-align:justify;">கலைஞரை விடவும், ஜெயலலிதாவை விடவும் நல்லாட்சி வழங்கும் தகுதி விஜயகாந்துக்கு இருக்கும் என்பதற்காகவில்லையாகினும், ஆகக்குறைந்தது புதிய சிந்தனைகளுக்கும் அரசியல் புத்துணர்வுக்கும் தமிழகத்தில் விஜயகாந்த மூலமாவது விதையிடப்படலாம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்துக்குரிய விடயமாகும்.</p>
<p style="text-align:justify;">இந்த நிலையில், தம் கையிலிருக்கும் &#8220;பெரும்&#8221; ஊடக பலம், மற்றும் பண பலம் மூலம் விஜயகாந்தை கோமாளியாக்குவது என்பது தி.மு.க தரப்பினருக்கு மிக இலகுவான விடயமாகும். அதில் வடிவேலு எனும் மக்கள் அபிமானமிக்க கலைஞனைப் பழிகொடுப்பது தமிழ் சினிமாவுக்கும் பேரிழப்பாகவே அமையும்.</p>
<p style="text-align:justify;">இன்றைய தேதியில், தமிழகத்தில் கதாநாயகர்களக்காக படங்கள் ஓடினாலும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க,கனேடிய பிரதேசங்களில் வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுக்காக அனேகம் படங்கள் ஆகக்குறைந்தது திருட்டி டிவிடியிலாவது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் திரையிட்டு நட்டப்படுவதை விட திருட்டு டிவிடிக்களை தாமே தயாரித்து சந்தையில் விட்டு இலாபம் பார்ப்பதும் அதே விநியோகஸ்தர் தரப்புதான் என்பது மகா &#8220;சிரிப்பு&#8221;.</p>
<p style="text-align:justify;">எது எவ்வாறாயினும், தமிழகத்தின் நாளைய தலைமுறை அரசியல் எதிர்பார்ப்புகள் மீண்டும் சுக்கு நூறாகி, பெருங்கட்சிகளின் காலடியில் அடகுவைப்பதன் மூலம் ஏற்பட இருந்த பெரும் மாற்றங்கள் பின்னடைவையே சந்தித்திருக்கின்றன என்பது வெளிச்சம் போட்டு அரங்கேற்றப்படுகிறது.</p>
<p style="text-align:justify;">தோல்வியில் துவண்டு போயிருக்கும் தம் தொண்டர்களுக்கு &#8220;ஒன்றுக்கு&#8221; மேற்பட்ட ஆசனங்களில் அமர்ந்து வெற்றி ஆறுதலை வழங்குவது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்று கொள்கை வகுப்பாளர்கள் நினைத்திருக்கலாம், எது எப்படியோ எல்லோருமாக கூட்டு சேர்ந்து, மீண்டும் இரு பெரும் கட்சிகளின் காலடியில் தமிழக அரசியலை அடகு வைத்திருக்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">இப்படி தெரிந்து கொண்டே எல்லாவற்றையும் செய்து விட்டு, பின் நாளில் இவர்கள் செய்யப்போகும் கண்துடைப்புப் போராட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், போஸ்டர்கள், உண்ணாவிரதங்கள், அறிக்கைகள், எல்லாம் ஓய்ந்த பின்னர் மீண்டும் சும்மா சும்மா கையிலெடுக்கப்போகும் ஈழத் தமிழர் உரிமைகள் என்று தேர்தல் முடிந்த சில மாதங்களில் நடக்கப்போகும் வானவேடிக்கைகள், நகைச்சுவைகளை நாமும் பார்க்கத்தான் போகிறோம்.</p>
<p style="text-align:justify;">இதையெல்லாம் நன்குணர்ந்தாவது தானும் தன் கலையும் என்று சிரிப்பு நடிகர்கள் தம் தொழிலைச் செய்தாலே புண்ணியமாய்ப் போகும்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/468/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/468/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/468/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=468&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2011/03/04/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-vs-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>

		<media:content url="http://arivudan.files.wordpress.com/2011/03/vadivel.jpg" medium="image">
			<media:title type="html">Vadivel</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சீமானின் வி.ஐ.பி ஸ்டன்ட்</title>
		<link>http://arivudan.wordpress.com/2011/03/03/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2011/03/03/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 03 Mar 2011 11:08:27 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=461</guid>
		<description><![CDATA[உலகுக்கெல்லாம் எச்சரிக்கை, சிங்களர்களுக்கு போர் அறைகூவல் என்று ஒன்றன் பின் ஒன்றாக சாகசங்கள் நிகழ்த்தி சிறைச்சாலை வரலாறு மூலம் அரசியலில் தத்தளிக்கும் சீமானுக்கே கொலை மிரட்டலாமே? நம்பவே முடியவில்லை இருந்தாலும் நம்பிக்கொள்கிறோம். வழக்கமாக இவர்தான் உலகுக்கெல்லாம் எச்சரிக்கை விடுவார், ஆனால் இவருக்கே எச்சரிக்கை அதுவும் கொலை மிரட்டல் என்று போலீஸ் கமிஷனரிடம் சென்றாராம் என்று செய்தியைப் பார்க்க நேர்ந்த போது நெஞ்செல்லாம் ஆடிப்போய் விட்டது. சீமானுக்கு கொலை மிரட்டல், அதுவும் புதுச்சேரியிலிருந்து கடிதம், ராம் கோபால் எனப் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=461&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">உலகுக்கெல்லாம் எச்சரிக்கை, சிங்களர்களுக்கு போர் அறைகூவல் என்று ஒன்றன் பின் ஒன்றாக சாகசங்கள் நிகழ்த்தி சிறைச்சாலை வரலாறு மூலம் அரசியலில் தத்தளிக்கும் சீமானுக்கே கொலை மிரட்டலாமே? நம்பவே முடியவில்லை இருந்தாலும் நம்பிக்கொள்கிறோம்.<span id="more-461"></span></p>
<p style="text-align:justify;">வழக்கமாக இவர்தான் உலகுக்கெல்லாம் எச்சரிக்கை விடுவார், ஆனால் இவருக்கே எச்சரிக்கை அதுவும் கொலை மிரட்டல் என்று போலீஸ் கமிஷனரிடம் சென்றாராம் என்று செய்தியைப் பார்க்க நேர்ந்த போது நெஞ்செல்லாம் ஆடிப்போய் விட்டது.</p>
<p style="text-align:justify;">சீமானுக்கு கொலை மிரட்டல், அதுவும் புதுச்சேரியிலிருந்து கடிதம், ராம் கோபால் எனப் பெயரிடப்பட்ட கடிதம், அதில் மாவீரன் ராஜபக்சாவை ஆதரிக்க வேண்டும் என்று கட்டளை என்று அடுக்கிச் செல்லப்படும் விந்தைகளை கண்ணுற்ற போது பகவதர் காலத்து சினிமாக்களின் பாதிப்பிலிருந்து சீமான் இன்னும் விடுபடவில்லையோ எ னத் தோன்றுகிறது.</p>
<p style="text-align:justify;">சரியோ பிழையோ இப்படியொரு கடிதம் சீமானுக்கு வந்திருந்தாலோ அல்லது கொலை மிரட்டல் சீமானுக்கு விடப்பட்டிருந்தாலோ அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஜனநாயகம்.</p>
<p style="text-align:justify;">சீமானுக்கென்று ஒரு அரசியல் கலாச்சாரம் புதிதாக இல்லை, அவரிடம் புரட்சி என்ற ஒரு புண்ணாக்கும் இல்லை, முன்னாளில் திருமாவளவன் பற்றிக்கொண்டு திரிந்த அதே கயிற்றை அவர் விட்டுச்சென்ற பின் இவர் பற்றிக்கொண்டுள்ளார், மேலதிகமாக வேண்டுமானால் 30 வருடமாக மக்களை மந்தைகளாக்கி ஒட்டு மொத்தமாக அதே மக்களை பலி கொடுத்து பரலோகம் சென்றடைந்த பிரபாகரனின் அடுத்த வாரிசாக தன்னை இனம் காட்டிக்கொள்வது மாத்திரம் புத்தம் புதிய வரலாறாகக் கொள்ளலாம்.</p>
<p style="text-align:justify;">இதில் வைக்கோக்கள்,நெடுமாறன்கள்,வீரபாண்டியன்கள், கஸ்பார்களின் பழைய கூட்டணிகளையெல்லாம் தகர்த்தெறிந்து முந்திக்கொண்ட காளானாக இவர் இருப்பதனால் தமிழகத்தில் காவல் துறை இவர் குறித்து சற்று விழிப்புடனேயே செயற்பட ஆரம்பித்தது. இருந்தாலும் மேடை கிடைத்தவுடன் துள்ளிப் பாய்ந்த இவரது வேகமும் பின்னர் அடங்கிப் போன விவேகத்தையும் நன்கறிந்து உணர்ந்து கொண்ட ஆரம்ப சகாக்களில் சிலர், குறிப்பாக அமீர் போன்றவர்கள் வெளியிலிருந்து ஆதரவு எனும் தொலைவிற்கு நகர்ந்து விட, கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் தமிழுணர்வைக் கொலையுணர்வாக்கி இறுதியில் காங்கிரசை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு அடிப்படைக் கொள்கையில் இணைந்து கொள்ள முடியாத அ.தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்து அரசியல் ஸ்டன்டை நிறைவேற்றிக்கொண்டார்.</p>
<p style="text-align:justify;">எங்கே தேர்தல் நேரத்தில் தான் மாயமாக மறைந்துவிடுவேனோ அல்லது காணாமலே போய்விடுவேனோ என்கிற பயத்தினால் தான் இந்தக் கொலை மிரட்டல் நாடகங்களா அல்லது அவ்வாறு உண்மையிலேயே சீமானைக் கொல்ல ஒருவர் அதுவும் புதுச்சேரியில் திட்டமிருக்கிறாரா என்பது காலம் நமக்கு அறியத்தரவேண்டிய அவிழ்க்க முடியாத புதிர்கள்.</p>
<p style="text-align:justify;">ஏனெனில், தன் பெயரிட்டு விலாசமிட்டு கொலை மிரட்டல் விடுமளவுக்கு ஒரு கொலைகாரன் அதுவும் இந்தக் காலத்திலா என்றொரு கேள்வியும் எழுகின்றது.</p>
<p style="text-align:justify;">ஒருவேளை சீமானுக்கே இவ்வாறான ஒரு உயிர்ப்பயம் இருக்குமானால், அதுவும் தேர்தல் காலத்தில் தான் பழிவாங்கப்படலாம் எனும் ஒரு பயம் அல்லது பய உணர்வோ இருக்குமானால் அவருக்குரிய தனி நபர் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் கடமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.</p>
<p style="text-align:justify;">ஆயினும், அது வி.ஐ.பி தரத்துக்கு உயர்ந்திருக்க வேண்டும் எனும் திட்டமிடல் சீமான் தரப்பில் இருந்திருக்கலாமா எனும் சந்தேகமே மேற்கூறப்பட்டிருக்கும் இதர காரணங்களினால் வலுக்கிறது. இத்தனைக்கும் சீமான் செய்ததெல்லாம் தன் சொந்த மண்ணில் நடக்கும் அரசியலுக்காகவோ அல்லது தன் சொந்த மக்களுக்காகவோ குரல் கொடுத்ததாக இல்லை. எல்லை கடந்த போர்க் கூவல்களும் மக்களிடம் குழப்பம் விளைவித்தமையும் தான்.</p>
<p style="text-align:justify;">இதற்காக அண்ணன் சீமானுக்கு வி.ஐ.பி தர பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்று அவரது தம்பிக்கள் நினைத்தால் ஒட்டு மொத்தமாக அவர்களே அவரைப் புடை சூழ்ந்து பாதுகாக்கலாம். அப்படிச் செய்தால் நாடும், நாட்டின் பணமும் கூட வீண் விரயமாகாமல் தடுக்கலாம்.</p>
<p style="text-align:justify;">இப்போதும் ஒன்றும் குறையவில்லை. உத்வேகமுள்ள அரசியல் பின்ணனியினால் அழுக்கடையாத, மக்கள் நலன் மீது அக்கறையுள்ள, தமிழர் உரிமையை உண்மையாக நேசிக்கும் ஒரு அரசியல் பிரதிநிதிக்கான வெற்றிடம் இன்றும் கூட தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது.</p>
<p style="text-align:justify;">திருமாவளன்கள், வைகோக்களாலோ அல்லது ஸ்டாலின்கள் அழகிரிக்களாலோ , ரஜினிக்கள் விஜய்கள் விஜயகாந்துகளாலோ கூட அவ்விடத்தை நிரப்ப முடியாத அளவு அவர்கள் பாரம்பரிய அரசியல் பாதையில் ஒரு வகை நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">எனவே, சீமான் போன்ற சுயேச்சைத் தமிழ் பிரதிநிதிகள் மக்கள் முன் வர வேண்டும் வளர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. சேகுவாராக்கள், காஸ்ட்ரோக்களை முன் மாதிரியாகக் கொண்டு, புரட்சியான பாதைகளை விதைப்பதிலும் தவறில்லை. மானசீகத் தலைவனாக பிரபாகரனை அவர் ஏற்றுக்கொள்வதிலும் தவறில்லை.</p>
<p style="text-align:justify;">ஆனால் பிரபாகரனையும் அவர் ஈழத்தமிழர்களுக்கு கொண்டு வந்து சேர்த்த அவலங்களையும் மறைப்பது தான் மகா தவறு. அண்ணன் நேரம் வரும் போது வருவார் என்று உப்பு சப்பில்லாமல் மக்களை ஏமாற்றுவது தவறு. தான் விரும்பிய அமைப்பு என்பதற்காக அந்த அமைப்பின் போலித்தன்மையையும், வங்குரோத்து நிலையையும், மக்களை ஏமாற்றும் சதிகளையும் வெளியில் சொல்லாமல் மறைப்பதுவும் மகா தவறு.</p>
<p style="text-align:justify;">இது அத்தனையையும் தாண்டி, இந்த சீமானாலும் ஒரு தலை சிறந்த மக்கள் தலைவனாக வர முடியாவிட்டாலும், ஒரு மக்கள் பிரதிநிதியாகவாவது வர முடியும் எனும் நம்பிக்கை எமக்கும் தான் இருக்கிறது, ஆனால் தேர்தலில் நின்று வெல்லும் அளவுக்கோ அல்லது சுயநலமற்ற தமிழர் சேவை செய்வதற்கோ அவரே இன்னும் தயாரில்லை என்பதே இப்போதைய கணிப்பு.</p>
<p style="text-align:justify;">அரசியல் கோமாளிகள் குழுவிலிருந்து உண்மையான ஒரு மக்கள் பிரதிநிதியாக, உண்மையைப் பேசி, உண்மையாக தமிழருக்கு உழைக்க சீமானுக்கு எமது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கிறோம்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/461/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/461/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/461/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/461/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/461/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/461/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/461/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/461/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/461/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/461/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/461/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/461/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/461/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/461/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=461&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2011/03/03/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>யாழ் மண்ணில் தமிழ் &#8211; முஸ்லிம் உறவு</title>
		<link>http://arivudan.wordpress.com/2011/03/02/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2011/03/02/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Wed, 02 Mar 2011 18:14:35 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=452</guid>
		<description><![CDATA[மீளக்கட்டியெழுப்பப்படும் யாழ் மண்ணில் தமிழ் &#8211; முஸ்லிம் உறவுகள் பற்றி சூத்திரம் இணையத்தில் வெளியான நேர்காணலின் மீள் பதிவு. யாழ்.தமிழ் மக்களுடன் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து நல்லஉறவுடனேயே வாழ்ந்து வருகிறோம் - ஒஸ்மானியா கல்லூரி அதிபர் பெருமிதம் வடபகுதியின் கடந்த கால துரதிர்ஷ்டவசமான நிலைமைகளினால் பரம்பரை பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் படிப்படியாக அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருப்பதும் வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=452&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>மீளக்கட்டியெழுப்பப்படும் யாழ் மண்ணில் தமிழ் &#8211; முஸ்லிம் உறவுகள் பற்றி சூத்திரம் இணையத்தில் வெளியான நேர்காணலின் மீள் பதிவு.<br />
<span id="more-452"></span></p>
<p><span style="color:#008000;"><strong>யாழ்.தமிழ்</strong><strong> மக்களுடன் பிட்டும் </strong>தேங்காய்ப்பூவும் <strong>போல இணைந்து நல்லஉறவுடனேயே வாழ்ந்து வருகிறோம்</strong></span></p>
<p><span style="color:#008000;"><strong> </strong></span>- ஒஸ்மானியா கல்லூரி அதிபர் பெருமிதம்<strong> </strong></p>
<p style="text-align:justify;">வடபகுதியின் கடந்த கால துரதிர்ஷ்டவசமான நிலைமைகளினால் பரம்பரை பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் படிப்படியாக அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருப்பதும் வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.</p>
<p style="text-align:justify;">முஸ்லிம் மக்கள் பலர் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டிருந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது ஏராளமான முஸ்லிம் மக்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பிவிட்டதால், பழுதடைந்த நிலையிலிருந்த பள்ளிவாசல்களும், முஸ்லிம் பாடசாலைகளும் திருத்தம் செய்யப்பட்டு, மீளவும் இயங்க ஆரம்பித்திருப்பது ஒரு சிறப்பான நிகழ்வாகும்.<br />
யாழ்ப்பாணத்தில் பிரபலமான முஸ்லிம் பாடசாலையாக திகழ்வதுதான் ஒஸ்மானியாக் கல்லூரி. இதன் அதிபராகக் கடமையாற்றும் எம். எஸ். ஏ. எம். முபாரக் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர். யாழ். பெரியகடை ஜும்ஆ பஸ்ஜித் பள்ளிவாசலின் பிரதம இமாம் பதவியையும் இவர் வகித்து வருகிறார். யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் கல்வி பயின்றவர். இவரது தகப்பனார் யாழ். மஸ்றஉத்தீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியவர்.</p>
<p style="text-align:justify;">இவரை சந்தித்த போது ஒஸ்மானிய கல்லூரி பற்றியும், யாழ். மக்களுடனான தனது நட்புறவு பற்றியும் சிறப்பாக எடுத்துச் சொன்னார். ‘யாழ். ஒஸ்மானியா கல்லூரி 1963 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. 1200 முஸ்லிம் மாணவர்களுடனும் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் இயங்கிவந்த இக்கல்லூரியில் தரம் ஆறு முதல் க. பொ. த. உயர்தரம் வரையில் அமைந்திருந்தது. அன்றைய கால துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளினால் 1990 அக்டோபர் 30ஆம் திகதியுடன் மூடப்பட்டது.<br />
அப்போது அதிபராகக் கடமையாற்றி வந்தவர் எம். ஹாமீம் என்பவராகும் என்கிறார் இப்போதைய அதிபரான எம். எஸ். ஏ. எம். முபாரக்.</p>
<p style="text-align:justify;">மீண்டும் இக்கல்லூரி இயங்க ஆரம்பித்திருப்பது பற்றி அதிபரிடம் கேட்ட போது, 2003 செப்டம்பர் 25ஆம் திகதியன்று கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு முன்பதாக 2002 ஆம் ஆண்டில் ஏ9 பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்கள் சுயவிருப்பத்தின்பேரில் படிப்படியாக இங்கு வந்து மீளக் குடியேறத் தொடங்கினார்கள்.</p>
<p style="text-align:justify;">கொழும்பு டி. பி. ஜாயா மகா வித்தியாலயத்தில் பகுதித் தலைவராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த நான், யாழ். முஸ்லிம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபராக பதவியேற்க நேரிட்டது.</p>
<p style="text-align:justify;">சேதமடைந்த பாடசாலை கட்டடங்களை திருத்தியமைத்தோம். அரசாங்கத்தினதும், சமூக, கல்வி சிந்தனையாளர்களினதும் நலன் விரும்பிகளினதும் உதவியுடன் கட்டடங்கள் மீளவும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, மலசலகூட வசதி, நூலகம் என்பனவும் மீளமைப்பு செய்யப்பட்டுள்ளது’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.<br />
இப்போது எத்தனை மாணவர்கள், கல்வி கற்கிறார்கள், என்ற கேள்விக்கு ‘முன்பு ஆண் பிள்ளைகள் மட்டும் கல்வி கற்றுவந்த இக்கல்லூரி கடந்தகால சூழ்நிலைகளினால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இப்போது ஆண், பெண் பிள்ளைகள் பயிலும் கலவன் பாடசாலையாக இயங்கி வருகிறது.</p>
<p style="text-align:justify;">175 ஆண் பிள்ளைகளும் 147 பெண் பிள்ளைகளுமாக மொத்தம் 322 மாணவர்கள் இங்கு கல்வி பயிலுகிறார்கள். முதலாம் தரத்திலிருந்து பதினொராம் தரம் வரையில் இங்கு இயங்கி வருகிறது. இப்போது 13 ஆசிரியர்களுடன், 4 தொண்டர் ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.</p>
<p style="text-align:justify;">கடந்த சில வருடங்களாக மாணவர்களின் தொகையும் படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. இவ்வருடம் மாணவர்களின் தொகை நூறால் அதிகரித்திருப்பதையும் சிறப்பாகச் சொல்லலாம்’ என்று பதிலளித்தார் அதிபர் எம். எஸ். ஏ. எம். முபாரக்.</p>
<p style="text-align:justify;">பாடசாலையின் வளர்ச்சிக்கு கிடைத்துவரும் பங்களிப்புப் பற்றி கூறுகையில், ‘யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உலமாக்கள், சமூகக் கல்வி அபிவிருத்தி அமைப்பு, அல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத் நிறுவகம், மக்கள் பணிமனை, சமூக கல்வியாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பிரமுகர்கள் எல்லோருடைய ஆலோசனையும், வழிகாட்டலும், பங்களிப்பும் கல்லூரியின் வளர்ச்சிக்கு துணைநிற்கின்றன.</p>
<p style="text-align:justify;">அத்துடன் வலயக் கல்வி அலுவலகம், கோட்டக் கல்வி அலுவலகம், மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு என்பனவும் கல்லூரியின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான இயக்கத்திற்கும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதையும் குறிப்பிட வேண்டும்’ என்று நன்றி பாராட்டினார்.</p>
<p style="text-align:justify;">ஒஸ்மானியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியன்று நடைபெற்றிருந்தது. கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது யாழ். கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி அ. வேதநாயகம் முதன்மை விருந்தினராகவும், யாழ். கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி வ. சிவபாலன் சிறப்பு விருந்தினராகவும், பேஷ் இமாம் அல்ஹாஜ் ஏ. எம். அப்துல் அமஸ் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததாக அதிபர் குறிப்பிடுகிறார்.</p>
<p style="text-align:justify;">பெப்ரவரி 16ஆம் திகதியன்று கல்லூரியில் மீலாத் துன் நபி விழாவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வைத்திய கலாநிதி எம். ஏ. சி. எம். றம்ஸி கொழும்பிலிருந்து வருகை தந்து இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்றார் அதிபர்.<br />
அதிபரிடம் யாழ்ப்பாண மக்களைப் பற்றியும், அவர்களுடனான தொடர்புகள் பற்றியும் கேட்டபோது, எனக்கு யாழ்ப்பாணத்தில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். சிலர் இப்போது வெளிநாடு சென்றுவிட்டார்கள். யாழ்ப்பாணத் தமிழ் மக்களுடன் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து நல்ல உறவுடனேயே வாழ்ந்து வருகிறேன். இதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.</p>
<p style="text-align:justify;">மீலாத்துன் &#8211; நபி விழாவையொட்டி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி, அரபுப் பாடல் போட்டி என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டிருந்ததுடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் எம். றம்ஸியால் வழங்கப்பட்டன.</p>
<p style="text-align:justify;">ஒஸ்மானியா கல்லூரி அதிபர் முபாரக்கின் மனைவியும், யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர். யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி பயின்ற இவர், இப்போது கொம்பனித்தெரு அல்இக்பால் மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார் என்ற தகவலையும் அதிபர் சொல்லி வைத்தார்.</p>
<p style="text-align:justify;">சந்திப்பு : அ. கனகசூரியர்</p>
<p>நன்றி: சூத்திரம்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/452/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/452/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/452/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/452/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/452/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/452/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/452/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/452/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/452/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/452/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/452/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/452/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/452/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/452/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=452&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2011/03/02/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இணையங்களும் இன முரண்பாடுகளும்</title>
		<link>http://arivudan.wordpress.com/2011/03/01/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2011/03/01/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/#comments</comments>
		<pubDate>Tue, 01 Mar 2011 18:04:55 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=443</guid>
		<description><![CDATA[சமூக முன்னேற்றம் மற்றும் இன ஐக்கியம் பிளவு பட்டிருப்பதிலும் இணைந்திருப்பதிலும் இலாபமடைவோர், நாட்டமற்றோர் எனும் இரு வேறு பிரிவுகள் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அத்தனை பிரிவினரிடமும் இருக்கிறார்கள். இதில் யார்? எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதன் அடையாளம் அவரவர்களின் செயற்பாடுகளை அறிவதன் மூலம் அவரவர் அறிந்து கொள்ள வேண்டிய விடயம். சமீப கால ஒரு சில தமிழ் இணையங்களின் போக்குகள் குழுப்பிரிவினைகள், கொள்கைப்பிரிவினைகளைத் தாண்டி இன முரண்பாடுகளுக்கு வித்திட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். கருத்து சுதந்திரம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=443&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">சமூக முன்னேற்றம் மற்றும் இன ஐக்கியம் பிளவு பட்டிருப்பதிலும் இணைந்திருப்பதிலும் இலாபமடைவோர், நாட்டமற்றோர் எனும் இரு வேறு பிரிவுகள் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அத்தனை பிரிவினரிடமும் இருக்கிறார்கள். இதில் யார்? எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதன் அடையாளம் அவரவர்களின் செயற்பாடுகளை அறிவதன் மூலம் அவரவர் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.</p>
<p style="text-align:justify;">சமீப கால ஒரு சில தமிழ் இணையங்களின் போக்குகள் குழுப்பிரிவினைகள், கொள்கைப்பிரிவினைகளைத் தாண்டி இன முரண்பாடுகளுக்கு வித்திட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.<span id="more-443"></span></p>
<p style="text-align:justify;">கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இன முரண்பாட்டு விஷத்தை விதைப்பவர்கள் அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக இருப்பார்கள் என்பது எதிர்பார்க்க முடியாத ஒரு விடயமாகினும், கருத்தாடல் மன்றங்கள் பக்கசார்பினை தவிர்ப்பதன் மூலம் வாசகர்களுக்கு நற்பயனைத் தரவாவது முயற்சி செய்யலாம்.</p>
<p style="text-align:justify;">சிதைவடைந்திருந்த இலங்கையை ஒற்றுமை எனும் பெயரில் அதிகார வர்க்கம் ஒரு வகையில் ஒடுக்கியாள ஒரு புறம் முயற்சித்துக்கொண்டிருக்கும் தருவாயில், உனக்கா எனக்கா ? என்றொரு பழைய கள்ளை புதிய பாத்திரத்திலிட்டு மீண்டும் இன உரிமைகளை மறுக்கும் வழி வகைகளை சில இணையங்கள் தமது தலையாய கடமையாக செய்து வருகின்றன.</p>
<p style="text-align:justify;">ஆங்கிலேயருக்குப் பின்னாலான இலங்கையில் வரலாற்றைப் பொறுத்தவரை உட்பூசல்களை மறைத்தாயினும் தனியொரு இனமாக மொழியடையாளத்துடன் தமிழர்கள் எனும் தரப்பை நிறுவுவதில் தமிழரசுக்கட்சியும் அது சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளும் ஓரளவு வெற்றியும் கண்ட அந்த இடத்திலிருந்து கட்டிக் காக்கப்பட்டிருக்க வேண்டிய இன ஒற்றுமையை முற்று முழுதாக சிதைத்த பெருமையை விசர்ப் புலிகளை சார்ந்த அதே வேளை, மீண்டும் அதே மனப்போக்குடன் தமிழ் &#8211; முஸ்லிம் பிரிவினைகளை இணையங்கள் அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன.</p>
<p style="text-align:justify;">அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களின் தனித்துவம் எனும் குட்டையைக் கிளறி குளிர்காய நினைக்கும் ஒரு இணையத்தை அண்மையில் பார்க்கக்கிடைத்த போது மீண்டும் வரலாறு எழுதப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.</p>
<p style="text-align:justify;">இலங்கை அரசியல் சாசனப்படி இலங்கையில் பல் வேறு &#8220;இனங்கள்&#8221; இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பது யாரும் அறியாத விடயமில்லை. இந்தப் பல்வேறு இனங்களில் யாரை எந்த &#8220;மொழிக்குள்&#8221; அடைப்பது என்பது அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.</p>
<p style="text-align:justify;">என்னதான் ஆங்கிலத்தைப் பேசிக்கொண்டாலும் அவுஸ்திரேலியர்கள் ஆங்கிலேயேர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை சிம்பாபிகள் ஆங்கிலேயேர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதும் இல்லை, அதே போன்று என்னதான் திராவிடக் குழுமத்தில் பிணைந்தவர்களாயினும் கன்னடர்கள் தம்மைத் தமிழராகப் பார்ப்பதில்லை, தமிழர்கள் தம்மைக் கேரளர்களாகப் பார்ப்பதில்லை.</p>
<p style="text-align:justify;">மொழியென்பது ஒருவொருக்கொருவர் தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு ஊடகம் எனும் வரையறையுடன் அவரவர் தம் சொந்த மொழியினை அணுகிக்கொள்வதும், அம்மொழியைக் கொண்டு தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்வதும் அவரவர் உரிமையாகவே கணிக்கப்படவேண்டும்.</p>
<p style="text-align:justify;">உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்த நாட்டிற்கான மொழியையே தம் மொழியாகக் கொண்டிருந்தாலும், தமது பொது அடையாளத்துக்காகவே தம்மை இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுவோர் அல்லது மாற்றுப் பெயராக &#8220;முஸ்லிம்கள்&#8221; அதாவது இஸ்லாமிய கோட்பாடுகளைப் பின்பற்றுவோர் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் முஸ்லிம்கள். எனவே அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் தமிழ் &#8211; முஸ்லிம்கள் என்றும், கேரள மொழியைத் தாய்மொழியைக் கொண்டார் தம்மை மலையாளிகள் என்றும் விரும்பினால் அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.</p>
<p style="text-align:justify;">தவிரவும் தம் பொது அடையாளத்துக்காக தமது &#8220;இன&#8221; த்தை முன்னிலைப்படுத்தாது &#8220;இஸ்லாமியர்&#8221; எனும் ஒரே குடைக்குள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">மனித வரலாற்றின் ஆரம்பத்தில் காணப்பட்ட குழும அடையாளங்களின் விருத்தியாக மாற்றம்பெற்ற &#8220;இன&#8221; அடையாளங்கள் சில நாடுகளில் இன்றும் சட்ட ரீதியாகவே பின்பற்றப்படுவது கண்கூடு. மிகச்சிறந்த உதாரணமாக இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக &#8220;சோனகர்கள்&#8221; என்றே வகைப்படுத்தப்படுவதை எடுத்துக்கூறலாம்.</p>
<p style="text-align:justify;">இதற்கு உதாரணமாக எந்தவொரு இலங்கை முஸ்லிமது இலங்கைப் பிறப்புச்சான்றிதழை எடுத்து நோக்கினும், அதில் இன அடையாளமாக &#8220;இலங்கைச் சோனகர்&#8221; ( Sri Lankan Moor ) என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.</p>
<p style="text-align:justify;">அரசியல் ரீதியாக ஏற்கனவே பிரித்துப்பார்க்கப்படும் ஒரு சமூகம் தமிழர் எனும் அடையாளத்துக்குள் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் தமிழ் பேசும் சாரார் யாராக இருந்தாலும் முதலில் தாம் உளத்தூய்மையுடன் நட்புக்கரத்தினை நீட்டத் தவறுமிடத்து ஏற்கனவே அன்னியப்பட்டுப் போன தமிழ் பேசும் முஸ்லிம் சமுதாயம் தம்மைத் தூரப்படுத்திக்கொள்ளத் தேவையான அனைத்து வழிகளையும் நாடும் என்பதற்கு &#8220;ஏன்&#8221; எனும் கேள்வியும் &#8211; விடையும் தேவையற்றது.</p>
<p style="text-align:justify;">ஏனெனில் வரலாற்றில் &#8220;இனக்கலவரம்&#8221; மூலம் தமது இருப்பைப் பாதுகாக்க அத்தனை கைங்கரியத்திலும் ஈடுபட்ட ஜேவர்தனாவும் பிரபாகரனும் மிகச்சாதுர்யமாக இஸ்லாமிய சமுதாயத்தை கையாண்ட கடந்த காலம் நாம் அனைவரும் அறிந்தது.</p>
<p style="text-align:justify;">சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் உணராத அளவு &#8220;அன்னியத்தை&#8221; தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் உணர்வதன் அடிப்படை என்ன? என்பதை ஆராய்வதிலிருந்து இந்த விடயத்தை ஆழ நோக்கலாம்.</p>
<p style="text-align:justify;">அடிப்படையில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அதாவது இலங்கைச் சோனகர்கள் செறிந்து வாழும் இலங்கையின் வட &#8211; கிழக்குப் பிராந்தியங்களில் அவர்கள் மீது தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் தான் இந்தப் பிளவின் அடிப்படைக் காரணமாக இருந்து வருகிறது.</p>
<p style="text-align:justify;">இந்தப் பிளவுகளின் ஆரம்பம் சாதாரண சிறுவர் பாடசாலையில் ஆரம்பித்து பல்கலைக்கழககங்கள் வரை நீடித்து வரும் உளவியல் போர் மூலம் நிலையான இடத்தைப் பெற்றுக்கொள்கிறது.</p>
<p style="text-align:justify;">அடிப்படையில் தம்மை மொழியால் அடையாளப்படுத்த இலங்கை முஸ்லிம்கள் இணங்கிய கால கட்டம் தகர்த்தெறியப்பட்டதையடுத்து உருவான இடைவெளியை இது வரை காலமும் அதிகாரத்தை அடைந்து கொண்ட அனைத்துத் தரப்பும் பெருப்பித்துக்கொண்டே வந்திருக்கிறதே தவிர அவற்றைக் குறைப்பதற்குத் தேவையான நல்லிணக்கத்தை அடி மட்டத்திலிருந்து உருவாக்குவதற்கு போதியளவு முயற்சிகள் மேற்கொள்ள வில்லை என்பதே கசப்பான உண்மை.</p>
<p style="text-align:justify;">அஷ்ரபின் வரவும் வளர்ச்சியும், அதற்கு முந்தைய, பிந்திய சமுதாயப் பின்னடைவுகளும், ஆயுத பலத்தின் மூலம் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வெளியேற்றங்களும் , பள்ளிவாசல் கொலைக்கொடூரங்களும் முஸ்லிம் சமுதயாம் தமது தனித்துவத்தைப் பாதுகாப்பதன் மூலமே எதிர்கால அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் எனும் வரலாற்றுப் பாடத்தை அவர்களுக்கு இரண்டு விதமாகப் புகட்டியிருக்கிறது இலங்கை வரலாறு.</p>
<p style="text-align:justify;">1. பிரபாகரன் முதல் விடுதலைப் புலிகளின் பெயரில் வேறு ஆயுதந் தாங்கிய காட்டுமிராண்டிகளாலும் அவர்கள் மீது வலுக்கட்டயமாக சுமத்தப்பட்ட சமூக அவலங்கள், கொலைக் கொடூரங்கள்.</p>
<p style="text-align:justify;">2. ஜேவர்தனாவுக்குப் பிந்திய சிங்கள அரசுகள் மற்றும் அஷ்ரபின் வளர்ச்சி மூலமாக தமது அரசியல் உரிமைகளை அரசுடன் நேரடியாகக் கலந்து கொள்வதன் மூலம், அல்லது நேரடி தொடர்பாடல் மூலம் பெற்றுக்கொள்ளுதல் மாத்திரமே சிறந்த வழியெனும் பாடம் புகட்டப்பட்டமை.</p>
<p style="text-align:justify;">இந்த இரண்டுங்கலந்த நிர்ப்பந்தத்தைச் சுமந்து கொண்டுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைப் பொறுத்தவரை தமது உரிமைகளுக்காக இன்னொரு சமூகத்துடன் இணங்கி வாழ்ந்தாலும், ஒன்று பட்டு பகிர்ந்து வாழ்வதென்பது சாதாரண தேவைகளுள் ஒன்றாக இருக்க வில்லை என்பது ஒரு புறம் இருக்க கடந்த கால அரசியல் அவ்வாறான வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இல்லை.</p>
<p style="text-align:justify;">எனவே, தமது தனித்துவம் அவசியமானது என்பதை ஒவ்வொரு இலங்கை வாழும் இஸ்லாமியரும் தமது ஆழ் மனதில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">நிலைமை இவ்வாறு இருக்க, எதிர்கால சமூக ஒற்றுமை எனும் சந்தர்ப்பமாவது ஒரு மொழி அடையாளத்திற்குள் வருமா என்று பார்த்தால் அதைச் சிதைப்பதெற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டு சில இணையங்கள் கைங்கரியங்களில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.</p>
<p style="text-align:justify;">கருத்துப் பகிர்வுகளை ஆரம்பித்து, அதில் சாடுவோரின் கருத்துக்களை முழுமையாகவும், எதிர்த்துரைப்போரின் கருத்துகளை சொல்லப்படும் விடயத்தை எதிர்க்கும் வலுவற்றதாக மாற்றுவதன் மூலம் கேலிக்கூத்தாகவும் மாற்றி இன முரண்பாடு ஒன்றையே தமது நோக்கமாகச் செயற்படும் இவ்வாறான இணையங்கள் தமது வருகையாளர் அதிகரிப்புக்காகவும் குறுகிய வழியில் பிரபலம் தேடவுமே இவ்வாறு செய்கின்றன என்று எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு எதையும் முடிவாக எடுக்க முடியாது.</p>
<p style="text-align:justify;">இதன் பிரதி பயன்களை எதிர்நோக்கிப் பார்க்கும் போது ஆரோக்கியமில்லாத இவ்வாறான குழப்பங்களை உருவாக்கிக் குளிர் காயும் இணையங்கள் மூலம் இணைய உலகிலும் தமிழ் &#8211; முஸ்லிம் பிரிவினையை வளர்த்தெடுப்பார்கள் என்பது திண்ணம்.</p>
<p style="text-align:justify;">இதன் பலன்கள் மூலம் தூங்கிக்கொண்டிருக்கும் துவேச உணர்வுகள் &#8220;இணையம் தானே&#8221; எனும் மனப்போக்கில் தற்காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டாலும் பிறிதொரு காலத்தில் இந்தத் துவேசம் தனி மனித வாழ்க்கையிலும் பின் சமூக ஒன்று கூடல்களிலும் நிச்சயம் பிரதிபலிக்கத்தான் போகிறது.</p>
<p style="text-align:justify;">அதன் மூலம் ஏற்கனவே &#8220;வரலாற்றுக் கசப்புணர்வுகளை&#8221; சுமந்து செல்லும் இரு சாராரும் மேலும் பிரிவினை நோக்கி நகர்த்தப்படுவர் என்பதையும் கணித்துக்கொள்ளலாம். இதன் மூலம் மிகுந்த பயனைப் பெறுபவர்கள் எப்போதுமே அதிகார வர்க்கத்தினரே.</p>
<p style="text-align:justify;">அதிகாரம் யார் கையில் இருந்தாலும் அவர்கள் அதிகார வர்க்கத்திற்குள் தம்மை உட்செலுத்திக்கொள்வதால் ஒருவரால் இன்னொருவர் எனும் ரீதியில் மீண்டும் மீண்டும் இரு சமூகங்களும் பாதிக்கப்படும் போது பெரும்பான்மை அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் வசம் கை குலுக்கல்கள் மூலம் சமாளிப்பு அரசியலும், தருவதைப் பெறும் நிலையையும் தவிர வேறு ஒரு முன்னேற்றத்தை சிறுபான்மை சமூகம் பெறப்போவதில்லை.</p>
<p style="text-align:justify;">சகோதரத்துவம் என்பது வெளியிலிருந்து வாங்கிக்கொள்ளும் பொருளல்ல அது சம்பந்தப்பட்டவர்களின் மனம் சம்பந்தப்பட்ட விடயம் எனும் உண்மை புரியாதளவுக்கு நமது சமூகம் இல்லையாகினும் தற்போது புலிகளின் அழிவுக்குப் பின்னரான சில பச்சோந்தி அரசியல் கருத்தாளர்களின் பார்வைகள் இலங்கையில் நிரந்தர தமிழ் &#8211; முஸ்லிம் பிரிவினைக்கு வித்திட்டு வருகிறது.</p>
<p style="text-align:justify;">ஆயா வீட்டில் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும் அதையும் மத எதிர்ப்பு கலந்து ஒரு சில பச்சோந்திகள் அதாவது ஆயுதந்தாங்கிய அரசர்கள் காலத்தில் ஓடி ஒளிந்து திரிந்த பச்சோந்திகள் இப்போது புதுப்புது புனைப்பெயர்களில் முளைத்து மத விரோதங்களை வளர்ப்பதன் மூலம் புதிய அத்தியாயத்தை எழுதுவதும் அவ்வாறானோர்களை தமது மடியில் வைத்து தாலாட்டி வளர்த்தெடுப்பதும் இன்றளவில் இவர்களுக்குப் பெருமையாக இருந்தாலும், நாளைய அளவில் வரலாறு வேறு விதமாக மாறும் போது அன்றைய தவறுகளை அவர்கள் உணர்வார்கள். எனினும் கால தாமதமாக அவர்கள் உணரும் போது பிளவுகள் பலமாக இருக்கும்.</p>
<p style="text-align:justify;">இந்த அடிப்படையை அவர்கள் உணராதவர்கள் என்று நினைக்க இயலாத அளவு சாதுர்யமான கட்டுரைகளை வெளியிடுமளவுக்கு புத்திசாலித்தனம் நிறைந்தவர்கள் இந்த ஒரு விசயத்தில் அதாவது தமிழ் &#8211; முஸ்லிம் பிளவுகளை வளர்ப்பதில் கங்கணங் கட்டிச் செயல்படுவது என்பது சமூக உணர்வுள்ள அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/443/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/443/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=443&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2011/03/01/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வீழ்ச்சியில் ஓர் சூழ்ச்சி !</title>
		<link>http://arivudan.wordpress.com/2011/02/25/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2011/02/25/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Fri, 25 Feb 2011 19:34:43 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=432</guid>
		<description><![CDATA[அதிகார வர்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் மிக முக்கியமான அம்சம் தாம் அழிய முன் மாற்று சக்திகளை அழிப்பது, இதில் பல படிமுறைகள் அவரவர் ஜனநாயக பூச்சின் அளவைக்கொண்டு மேற்கொள்கிறார்கள். இதற்கான சீரிய உதாரணங்களை அமெரிக்காயிசத்திலிருந்தும் புலிகளின் முட்டாள் ஈழமிசத்திலிருந்தும் மிக இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். அண்மைய உலக அரங்கை உலுக்கிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத மத்திய கிழக்கு மக்கள் புரட்சி என்பது தற்கால நடைமுறையில் காணப்படும் பூச்சளவிலான மேற்கத்தேய ஜனநாயக அதிகார அளவுகோளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் போது, போற்றப்பட வேண்டிய மக்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=432&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>அதிகார வர்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் மிக முக்கியமான அம்சம் தாம் அழிய முன் மாற்று சக்திகளை அழிப்பது, இதில் பல படிமுறைகள் அவரவர் ஜனநாயக பூச்சின் அளவைக்கொண்டு மேற்கொள்கிறார்கள்.</p>
<p>இதற்கான சீரிய உதாரணங்களை அமெரிக்காயிசத்திலிருந்தும் புலிகளின் முட்டாள் ஈழமிசத்திலிருந்தும் மிக இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.<span id="more-432"></span></p>
<p>அண்மைய உலக அரங்கை உலுக்கிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத மத்திய கிழக்கு மக்கள் புரட்சி என்பது தற்கால நடைமுறையில் காணப்படும் பூச்சளவிலான மேற்கத்தேய ஜனநாயக அதிகார அளவுகோளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் போது, போற்றப்பட வேண்டிய மக்கள் புரட்சியாகவும், வரலாற்றில் பதியப்படப்போகும் மறுமலர்ச்சிக்காலமாகவும் மாறுவது திண்ணம்.</p>
<p>எனினும், இதன் அடிப்படையில் வீழ்ச்சியில் ஓர் சூழ்ச்சி இருந்தது என்பதையும், அது மத்திய கிழக்கில் எதை தகர்த்தெறிந்தது அல்லது பலவீனமாக்கியது என்பதையும் எண்ணிப்பார்க்கும் வேளையில் வரலாறு ஏற்கனவே பதியப்பட்டதனால் காலதாமதம் பின்னொரு காலத்தில் உணரப்படும்.</p>
<p><strong>அமெரிக்காவின் எதிர்காலம்</strong></p>
<p>உலக வல்லாதிக்க சக்தியாக நிலைகொண்டிருக்கும் அமெரிக்கா, எத்தனை காலத்திற்கு அந்நிலையில் தாக்குப்பிடிக்கும் என்பது குறித்து சில காலங்களுக்கு முன்னதாக சி.ஐ.ஏ அறிக்கைகள் பேச ஆரம்பித்திருந்ததை மக்கள் தற்போது மறந்திருக்கலாம் என்பது ஏற்புடையது. அதாவது சர்வ வல்லாதிக்க சக்தியாக இருக்கும் அமெரிக்க மிக விரைவில் சம பலத்துடனான &#8220;பிற&#8221; சக்திகளுடன் சம மேடையில் அமைதி காக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதே அந்த அறிக்கைகளின் சாரம்சமாகும்.</p>
<p>அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், கறுப்பினத்தவர் மாத்திரமன்றி இஸ்லாமிய பின்புலத்தையும் கொண்ட பராக் ஒபாமா உசைனின் எழுச்சியும், ஆட்சியும் உலக அரங்கில் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கப்பட்டிருக்கையில் மக்கள் எதிர்பார்க்காத வகையில் உலகத்தை ஆட்டிப்படைக்கும் &#8220;பொருளாதார&#8221; பின் தங்கல் மாயமாக உருவாகி வந்தது என்று கூறுவோரை ஒரு புறம் தள்ளி வைத்து விடுவோம்.</p>
<p>ஒரு சிறு உதாரணமாக, 200 வருடங்களுக்கு முன்பதாகவே அடுத்த 200 வருடங்களில் சந்திக்கப்போகும் போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க நிலக்கீழ் பயணப் பாதைகளை வடிவமைத்துச் செயற்பட்ட மேற்கத்தேய திட்டமிடல், கொள்கை வகுப்பாளர்கள் தம்மை எதிர்கொள்ளப்போகும் பொருளாதார நெருக்கடிகள் பற்றி அறியாமல் தான் இருந்தார்கள் என்பதை வாதத்திற்கே எடுத்துக்கொள்ளத் தவறுபவர்களையும் தள்ளி வைத்து விடலாம்.</p>
<p>ஆனாலும், சர்வ ஆதிக்கத்தைக் கொண்ட மாபெரும் சக்தியாகத் திகழும் நிலையிலிருந்து சறுக்கினால் உலக அரங்கில் அமெரிக்காவின் எதிர்காலம் எங்கு போய் முடியும் என்பதை அமெரிக்க திட்டமிடல் வல்லுனர்கள் அறியாமல் தான் இருக்கிறார்கள் அல்லது அதற்கு மாற்றீடு செய்யாமல் தான் இருக்கிறார்கள் என்று முன்னுரை வழங்க வரும் எண்ணமே யாருக்கும் இருக்காது என்பதே உண்மை.</p>
<p>அமெரிக்காவிற்குச் சமமான வல்லரசாக இந்தியா உருவாகும் என்ற கோஷம் இந்திய அளவில் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டு வருவதை விட சத்தமே இல்லாமல் நிலவு வரை தன் வழியில் புதிய பாதைகளைத் திறக்கும் சீனா குறித்து அமெரிக்கா எச்சரிக்கையாகவே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.</p>
<p>புவியியல் ரீதியாக அமெரிக்க நட்புறவை புறந்தள்ளும் நிலைக்கு இந்தியா செல்ல வேண்டுமாக இருந்தால், அணு வல்லமையுடன் பாகிஸ்தானோ, சீனாவோ அல்லது ரஷ்யாவோ அருகில் இருந்திருக்கக் கூடாது, ஆனால் இப்பேற்பட்ட சுற்றுச்சூழலில்தான் இந்தியா இருக்கிறது எனும் உண்மையின் அடிப்படையில் அமெரிக்காவின் எதிர்கால நிலைக்கு இந்தியா ஒரு சவாலாக வருவது என்பது ஆகக்குறைந்தது அரை நூற்றாண்டிற்குப் பின்னர் வாதத்திற்கு வரவேண்டிய விடயம்.</p>
<p>ஏனெனில், விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க நட்புறவு என்பது இந்தியாவுடன் எப்போதும் தொடரும், ஆகக்குறைந்தது நட்புக்கு மரியாதை நிமித்தத்திலாவது, இன்னொரு இந்திரா காந்தி வராத வரை, பேச்சளவும் செயலளவும் இந்திய அரசியலில் ஒன்றுக்கொன்று முரணாகவே காணப்படும்.</p>
<p>அதனைத் தவிர்ந்த ரஷ்ய ஏதாதிபத்தியம் என்பது காலங்கடந்த எதிர்பார்ப்பாயினும், சீன வளர்ச்சியும், கொரியத் தலையிடிகளும் சர்வதேச அரங்கில் அமெரிக்காவைப் பொருளாதார ரீதியில் வீழ்தியே ஆகும் எனும் உண்மை உணரப்படுவதன் விளைவில் ஏற்படப்போகும் பல்வேறு உலக மாற்றங்களில் ஒன்றாகவே இந்த மத்திய கிழக்கு மறுமலர்ச்சிகள் பார்க்கப்பட வேண்டும், அல்லது எதிர்காலத்தில் உணரப்படும்.</p>
<p>சதாமின் வீழ்ச்சிக்குப்பின்னர் மேற்கத்தேய உலகின் தோழராக வர்ணிக்கப்பட்ட கடாபியை கவிழ்ப்பதாலோ, இஸ்ரேலோடு இன்னொரு யுத்தத்தை விரும்பாத முபாரக்கின் ஆட்சியைக் கலைப்பதாலோ, யாருக்கும் தொந்தரவில்லாத பஹரைனின் மன்னராட்சியைக் கவிழ்ப்பதாலோ அமெரிக்காவிற்கு என்ன இலாபம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கும் கோணம் &#8220;பச்சையாக&#8221; காணப்பட்டாலும், மத்திய கிழக்கில் சிந்தப்படும் &#8220;சிவப்பு&#8221; நீரினால் அமெரிக்கா அடையப்போகும் நன்மைகள் மிகக் கொடுமையான ஜன நாயகம் என்பது காலங்கடந்தாவது நிச்சயம் உணரப்படும்.</p>
<p>உலகமே பொருளாதாரச் சிக்கலில் சீரழிந்துகொண்டிருக்கையில் மத்திய கிழக்கில், குறிப்பாக அரபு நாடுகளில் அதன் பாதிப்பு விகிதம் குறைவாகவே இருந்தாலும், மத்திய கிழக்கை ஒன்றிணைக்கும் முக்கியமான விடயங்களைப் பிளவு படுத்துவதன் மூலம் எதிர்கால &#8220;சம சக்திகளின்&#8221; வளர்ச்சியை அல்லது அதன் வளர்ச்சி வேகத்தை அமெரிக்காவினால் குறைக்க முடியும் என்பது கவனத்திற்கொள்ள வேண்டியது.</p>
<p>சிங்கள அரசுகளால் பாலூட்டி,தேனூட்டி உல்லாசமாய் வளர்க்கப்பட்ட பிரபகராயிசம் தான் அழியும் தருவாயில் எந்த மக்களுக்காகப் போராடியதாகக் கூறியதோ அந்த மக்களையே கூண்டோடு ஒரு இடத்தில் குவித்து எவ்வாறு பலிச் சூழ்சியை மேற்கொண்டதோ அதை விட அதிக பங்கில் தம் நிலை தகர முதல் உலகின் நிலையை தகர்த்துத் தங்கிக்கொள்ளும் வீழ்ச்சியின் சூழ்ச்சியையே அமெரிக்க திட்டமிடலும் செயற்படுத்தப்படுகிறது.</p>
<p>அதற்கான வெளிப்படைப் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுவது ஈரானும் சியாயிசமும்.</p>
<p>இதன் மூலம் மத்திய கிழக்கில் ஏற்படும் அரசியல் மாற்றங்களினால் எதிர்காலத்தின் அமெரிக்கா சார்பு நிலை உருவாகுமோ இல்லையோ பலவீனமாகிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் நிலையை கண்டு கொள்ளவோ அல்லது உள் நாட்டு உறவுகள் ஒரு சீரான நிலையை அடையும் வரை, அடுத்ததாக பிராந்திய நிலை சுமுகமாக மாறும் வரை, கூட்டணிகள் மூலம் பிற சக்திகளைப் பலப்படுத்தும் மனோ நிலையை ஈரான்,எகிப்து, லிபியா மற்றும் சவுதி அரேபியா போன்ற முக்கிய நாடுகளிடம் காணப்படப்போவதில்லை.</p>
<p>இதன் மூலம் பொருளாதார கூட்டணிகளின் பிணைப்பைப் பலவீனப்படுத்தி, சீர் குலைந்திருக்கும் மேற்கத்தேய பொருளாதார பலவீனத்தாக்கத்தை மத்திய கிழக்கு முதல் ஆசியா வரை விரித்து, தமது நிலையை உலகுக்குப் பலவந்தமாகத் திணிக்கும் திட்டமிடலை அரங்கேற்றுவதில் அமெரிக்க அதிகாரத்திற்கு பெருந் தடைகள் தளர்த்தப்படுகிறது.</p>
<p>மறு புறத்தில் சீனப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்தின் சக்தியாக மாற்ற முனைந்துகொண்டிருக்கும் சீனத் திட்டமிடல்களை சமாளிப்பதில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் தமது முன்னாள் சகாக்களை அல்லது முன்னாள் நண்பர்களை இழக்கும் அமெரிக்க சூழ்ச்சியின் இன்னொரு காரணம் என்பது உணரப்படும்.</p>
<p>எனவே, தாம் வீழும் போது மாற்றாரையும் பலவீனப்படுத்தியே ஆக வேண்டும் எனும் அதிகார வர்க்கக் கோட்பாட்டை அதிகார உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா மீண்டும் நிரூபிக்கிறது.</p>
<p>எதிர்கால உலகம்</p>
<p>ஏகாதிபத்திய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள அவரவர் பங்குக்கு உலக நாடுகள் போட்டி போட்ட காலம் மறைந்த பின், வல்லாதிக்கப் பனிப்போர், வல்லாதிக்க எதோச்சாதிகாரம் என்று பல் வேறு வகை வரலாற்றை 1900 &#8211; 2000 வரை கண்டு களித்து விட்ட நவீன உலகம் பொருளாதார ஏகாதிபத்திய நூற்றாண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதா எனும் கேள்வி ஒரு புறமிருக்க, சீர் குலைவினால் சமப்படுத்தல் மூலம் மீண்டும் வல்லாதிக்கம் துளிர் விடுமா எனும் கேள்வியும் முன் வைக்கப்படும் நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாதது.</p>
<p>இருந்தாலும் ஆதிக்க சக்திகள் பேரழிவின் நுனியில் இதைத்தான் செய்யும் என்பதையும் உலக வரலாறு நமக்குப் புகட்டித்தந்திருக்கிறது. திரைமறைவில் அதைச் செய்யும் &#8220;அறிவாளிகளாக&#8221; அமெரிக்காவும், ஆக்ரோஷமும், வளர்த்த கடா மார்பில் பாயும் ஆத்திரமும் அடக்க முடியாத அப்பாவியாய் கடாபியும் இன்று நம் கண்களுக்குத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.</p>
<p>இதில் யாருக்கு வெற்றி தோல்வி என்பதை விட, இரு முனைகளிலும் செயல்படுவது ஆதிக்க, அதிகார வெறி என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டியது.</p>
<p>சிற்றரசர்கள் முதல் பேரரசர்கள் வரை எப்போதுமே இதைத்தான் செய்தார்கள், செய்து கொண்டும் இருக்கிறார்கள். அதைக் கடந்த காலங்களிலும் நாம் கண்ணுற்றோம், கடந்த வருடமும் கண்ணுற்றோம், இந்த வருடமும் கண்ணுற்று இன்பம் பெற்றுக்கொண்டேயிருப்போம்.</p>
<p>நீண்ட காலஅதிகாரத்தில் இருக்கும் யாரும் இதைத்தான் செய்வார்கள், அதற்கு ஜனநாயகப் போர்வை இருந்தாலும் கூட அதன் செயற்பாடுகளில் அதீத ஒற்றுமை காணப்படும். இந்த மக்கள் எழுச்சி என்பது தற்செயலாக இருந்தாலும், திட்டமிடலாக இருந்தாலும், பேராதிக்கவாதிகளுக்கு ஒரு செய்தியை நன்கு திட்டமிட்டு சொல்லியிருக்கிறது.</p>
<p>எனவே தான், அமைதியாக ஆரம்பித்த மக்கள் எழுச்சி இன்று சொந்த மக்களுக்கெதிராக ஒரு தலைவனை ஆத்திரங்கொண்டு திரண்டெழவும் செய்திருக்கிறது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/432/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=432&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2011/02/25/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?</title>
		<link>http://arivudan.wordpress.com/2010/11/02/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2010/11/02/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/#comments</comments>
		<pubDate>Tue, 02 Nov 2010 20:37:45 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=417</guid>
		<description><![CDATA[வெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு. இந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் பூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். இப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=417&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">வெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு.</p>
<p style="text-align:justify;">இந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் பூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">இப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?<span id="more-417"></span></p>
<p style="text-align:justify;">ஒன்று பட்ட இலங்கை என்பதன் அடிப்படை ஆளும் வர்க்கத்தின் கொள்கைக் கோட்பாடு சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் அதை மக்கள் மயப்படுத்தி வேற்றுமைகளை வளர்ப்பதும் அதைப் பரிபாலிப்பதும் அரசியலின் அடிப்படை.</p>
<p style="text-align:justify;">இந்த இரண்டையும் தாண்டி மக்கள் என்பது சாத்தியமா என்றால் அது நடைமுறையில் சவாலான விடயமாகக் கருதப்படும், இந்த இரண்டும் இல்லாத மக்கள் ஒற்றுமை சாத்தியமா என்றால்? அது சாத்தியம் என்று அடித்துக் கூறிவிடலாம்.</p>
<p style="text-align:justify;">எனவே, அரசியலுக்கப்பாற்பட்ட சமூக ஒற்றுமைக்குத் தடையாக இருக்கப்போவது ஆளும் வர்க்கத்தின் பிரித்தாளும் கோட்பாடுகளும், அவற்றை அவர்கள் செயற்படுத்த உபயோகப்படுத்தப் போகும் அரசியல் வாதிகள் எனும் கருவிகளும் தான் என்பதை ஏற்றுக்கொள்ள யாருக்கும் தயக்கம் இருக்கப் போவதில்லை.</p>
<p style="text-align:justify;">இந்த சவாலை மகிந்த அரசு அறியுமா? அறிந்தாலும் அதற்கான விடிவைப் பெற்றுத்தருமா என்பது என்றாவது ஒரு நாள் மீண்டும் இலங்கைக்கே போய் விட வேண்டும் எனும் ஏக்கத்தில் வாழ்பவர்களின் மனதில் வாழும் பிரதானமான கேள்வியாகும்.</p>
<p style="text-align:justify;">பிரபாகரனை அழித்தொழித்த கையோடு அவசர அவசரமாக களையெடுப்பைச் செய்து கொண்டு வந்த வெளிப்பக்க மகிந்த அரசைக் கூட விமர்சனம் பண்ணத் தெரியாத வங்குரோத்து நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்க, நாட்டில் என்ன நடக்கிறது எனும் அனுமானமே இல்லாத நிலையில் தான் தமிழ்க் கட்சிகள் இருக்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">இந்த நிலையில், எதிர்க்கட்சி அரசியலை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் பல்வேறு பட்ட குழப்ப நிலைக்குள் தந்திரமாக பிரதான (Main steam) அரசியலை வெளியில் வைத்துப் பாதுகாக்கும் புத்தி சாதுர்யமான மகிந்தா சகோதரர்களின் அரசியல் வலையிலிருந்து மீண்டு எழுவதற்கு இன்னும் நூறு ரணில் விக்கிரமசிங்காக்கள் பிறக்க வேண்டும்.</p>
<p style="text-align:justify;">இலங்கையின் அபிவிருத்தி என்பது உலக அரங்கில் இனிமேல் ஆர்ப்பாட்டமில்லாமல் அரங்கேற்றப்படும்.</p>
<p style="text-align:justify;">இந்த அபிவிருத்தியைத் தடுக்கும் சக்தியோ அல்லது இணைந்து பணியாற்றும் சக்தியோ கூட தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு இல்லாத நிலையில், மகிந்தா சகோதாரர்களின் பாதை மிகத் தெளிவானதாகவும், தங்கு தடையற்றதாகவும் இருக்கப்போகிறது.</p>
<p style="text-align:justify;">சூழ்நிலை அரசியலின் ஆளுமையில் தவித்திருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறுவதற்கு எடுக்கப்போகும் காலத்திற்குள், இலங்கையின் அரசியல் நிலைப்பாடும் நாட்டின் பயன்பாடும் முதலாளித்துவ சுரண்டல்களின் மையமாக நவ நாகரீக முறையில் மாற்றம் பெற்றிருக்கும்.</p>
<p style="text-align:justify;">பல்வேறு சர்வதேசப் பங்காளர்களின் தலையில் (ஏறத்தாழ பிரேமதாசா பிரபாகரனிடம் வடக்கைக் கொடுத்து ஏகபோகமாக தமிழர் காதில் புலியின் பிரசன்னத்தை ஊதிப் பெருப்பித்ததைப் போல) கட்டிவிட்டு, விளைச்சலின் சுகபோகத்தை தம் குடும்பத்தோடும், ஒரு பகுதியை நாட்டோடும் பகிர்ந்து கொள்வதன் மூலம் சிங்கப்பூரின் &#8220;லீ&#8221; யை மிஞ்சிய ஒரு வரலாற்றுப் பதவியை நோக்கி மகிந்த சிந்தனை பயணித்துக் கொண்டிருக்கிறது.</p>
<p style="text-align:justify;">இந்த இடைவெளியை நிரப்ப, மக்கள் அபிப்பிராய பேதத்தை ஏதாவது ஒரு வழியில் உருவாக்கும் பழைய அரசியலைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் அதைத்தவிர எதையும் செய்யத் தெரியாத காரணத்தினால் மகிந்தாக்கள் எதிர்பார்க்கும் ஆனால் நேரடியாகத் தலையிட விரும்பாத &#8220;பிளவுகளை&#8221; தானாகத் தோற்றுவிப்பார்கள்.</p>
<p style="text-align:justify;">இந்தப் பிளவுகளுக்காக தரங்கெட்ட அரசியல் பாவிக்கப் போகும் பிரதானமான ஆயுதம் மீண்டும் இனப் பிளவுகளாகும். இலங்கையில் பிரதானமாக ஏற்படுத்தக்கூடிய இனப் பிளவுகள் என்பது சிங்கள &#8211; தமிழ் அல்லது முஸ்லிம் &#8211; தமிழ் அல்லது சிங்கள &#8211; முஸ்லிம் பிளவுகள் என்ற வகைகள்.</p>
<p style="text-align:justify;">எனினும், மீண்டும் இந்தப் பிளவுகளின் போது ஆயுத , அதிகார ஆளுமைகளின் விதமும், வகையும் வேறுபட்டுக் காணப்படப்போகிறது.</p>
<p style="text-align:justify;">அரசோடு இணைந்து செயற்படும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படப்போகும் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்த வரை கடுகதியாக முன்னேற முடியாத கட்டாயம் என்பது தங்கி வாழும் அல்லது சார்ந்து வாழும் நிலைக்கே அரசியலையும் மக்களையும் இட்டுச் செல்லும் எனும் போது, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்பவர்களிடன் யார் முந்தி சலுகைகளைப் பெற்றுக்கொள்வது எனும் போட்டிதான் நிலவுமே தவிர பெற்றுக்கொடுப்பது என்பது இரண்டாம் கட்டத் தேவையாக மாறிவிடும்.</p>
<p style="text-align:justify;">எனவே சராசரி வருமானத்திற்குக் குறைந்த நிலையில் வாழும் மக்கள் மீண்டும் மீண்டும் தயவில் வாழும் நிலைக்கும், அல்லது குறுக்கு வழியில் முன்னேறிச் செல்லும் பழைய நிலையிலுமே வைத்துப் பாதுகாக்கப்படுவார்கள். எனவே சலுகைகளைப் பெற்றுக்கொள்வதையே தமது உச்ச பட்ச இலக்காகக் கொண்டு வாழும் ஒரு தரத்தினரையும் பிரித்தாளும் வர்க்கத்தினர் உருவாக்கி விடுவார்கள்.</p>
<p style="text-align:justify;">இந்த நிலையை சிங்கள மக்கள் உணர்ந்து புரட்சி செய்வதற்கான கால அவகாசத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏனெனில் தென்பகுதி காணப்போகும் மாற்றங்களில் ஏற்படும் மாயையையும், நாட்டைக் குட்டிச் சுவராக்கிக்கொண்டிருந்த போரினை முடிவுக்குக் கொண்டு வந்து சுபீட்சத்துக்கு வழி சமைத்த மகிந்தாக்களின் சேவை தொடர்பான எண்ணங்களையும் பிரித்தறிந்து அம்மக்கள் எப்போதும் சாதகமாகவே பார்க்கப்போவதனால், எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் வளங்கள் மூலமாக அவர்கள் வாயடைக்கப் படுவார்கள்.</p>
<p style="text-align:justify;">எனவே தமிழ் &#8211; முஸ்லிம் உறவுகள் சீர்குலைந்திருப்பதன் தேவையே எதிர்கால முதலாளித்துவத்துக்கு பேருதவியாக இருக்கப்போகிறது.</p>
<p style="text-align:justify;">இந்தத் தேவையை அரச சார்பில் நிறைவேற்றி வைக்கப்போவது யார் எனும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயமாகினும், இதன் மூலம் தோல்வியைக் காணப்போவது ஏற்கனவே போர் எனும் பெரும் பூதத்தால் பெரும் பின்னடைவை சந்தித்த அதே தமிழ் பேசும் சமூகமாகும். அவர்களுக்கான மாற்றீடாக வெளிநாடுகளின் உருவம் முன்னால் வந்து நிற்கப்போவதால் அதற்கான வழிகளில் தன் நிறைவு பெறுவதே எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அவர்களின் முதற் தேவையாக இருக்கப் போகிறது.</p>
<p style="text-align:justify;">இந்த வெற்றிடத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகும் சிறுபான்மை பிரதிநிதித்துவம் விழித்துக் கொண்டாலன்றி ஆத்மார்த்தமான ஒன்று பட்ட இலங்கையைக் கட்டியெழுப்புவது நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.</p>
<p style="text-align:justify;">தற்போது விட்டுக்கொடுக்கப்பட்டுள்ள &#8220;இடத்தை&#8221; தமது ஆளுமையின் மூலம் நிரப்பிக்கொண்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடருமாக இருந்தால் நாளடைவில் இதனை மீண்டும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வர்க்க ஆளுமையின் மூலம் சிறுபான்மையினர் தரம் பிரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். அந்தத் தரம் பிரித்தலின் போது மீண்டும் வன்முறைகள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையாகினும், பிரிவினைகள் முன்னரை விட ஆழமாக விதைக்கப்படப்போவது திண்ணம்.</p>
<p style="text-align:justify;">அந்த விதைப்பின் பின்ணனியில் இலாபமடைவது மீண்டும் வர்க்கக்கூட்டு அரசியலாக இருந்தாலும் உண்மையான நட்டத்தின் பாதிப்பு சிறுபான்மைத் தமிழ் பேசம் சமூகத்தையே வந்து அடையும். சிங்கள மக்களைப் பொறுத்தவரை இவ்வாறான உளவியல் போரினை கட்சி ரீதியாகவும், அரசியல் வேறுபாடுகளாகவும் மாத்திரமே உணர்ந்து கொள்ளப்போவதனால் அவர்களுக்கு இது முக்கியத்துவமற்ற விடயமாகவே இருக்கும். தமிழ் பேசும் சமூகத்தைப் பொறுத்தவரை இதன் பாதிப்புகள் அரசியல் வரையறையைத் தாண்டிய இன, பிரதேச மற்றும் தராதரப் பிரச்சினைகளாகவும் உருவெடுக்கும் நிலையை அறிந்து அரசியல்வாதிகள் தமது நிலை மாற்றத்தினை உரிய நேரத்தில் மேற்கொள்ளவில்லையாயின் உண்மையான முன்னேற்றத்தை தமது சமூகத்துக்கு அவர்களாலும் வழங்க முடியாது, இவ்வாறான நிலை ஏற்படாமல் தடுக்கும் வகையில் உள்ளாட்சிக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொள்ளத் தவறினால் மகிந்த அரசாலும் ஆத்மார்த்தமான ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்க முடியாது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/417/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/417/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/417/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/417/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/417/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/417/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/417/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/417/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/417/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/417/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/417/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/417/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/417/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/417/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=417&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2010/11/02/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கழற்றி வீச அவை செருப்பல்லவே? வடுக்கள் !</title>
		<link>http://arivudan.wordpress.com/2010/10/31/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a-%e0%ae%85%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2010/10/31/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a-%e0%ae%85%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 31 Oct 2010 13:59:32 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=408</guid>
		<description><![CDATA[சராசரியாக ஒவ்வொரு இலங்கையரது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிய போர் முடிந்து விட்டது, ஆனால் அதிலிருந்து சுமக்கும் வடுக்கள் எப்போது மறக்கப்படும்? &#8211; இந்தக் கேள்வி அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும். விடுதலைப் போர் என்று ஆரம்பித்தாலும் பின்நாளில் கயவர்களின் இருப்புக்கான பலி கொடுக்கும் போராக மாறிய யுத்தத்தின் வெளி முகத்துக்கு சர்வதேச அரங்கில் புதிய முகவரி கொடுத்த வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றுதான் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை இரவோடு இரவாக பல வந்தமாக வெளியேற்றிய முட்டாள் புலிகளின் புத்தி சாதுர்யம். அது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=408&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">சராசரியாக ஒவ்வொரு இலங்கையரது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிய போர் முடிந்து விட்டது, ஆனால் அதிலிருந்து சுமக்கும் வடுக்கள் எப்போது மறக்கப்படும்? &#8211; இந்தக் கேள்வி அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும்.</p>
<p style="text-align:justify;">விடுதலைப் போர் என்று ஆரம்பித்தாலும் பின்நாளில் கயவர்களின் இருப்புக்கான பலி கொடுக்கும் போராக மாறிய யுத்தத்தின் வெளி முகத்துக்கு சர்வதேச அரங்கில் புதிய முகவரி கொடுத்த வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றுதான் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை இரவோடு இரவாக பல வந்தமாக வெளியேற்றிய முட்டாள் புலிகளின் புத்தி சாதுர்யம்.</p>
<p style="text-align:justify;">அது இடம்பெற்று 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் புலி ஆதரவாளர்களின் மன நிலையும், தமிழின ஆர்வலர்களின் மன நிலையும் எவ்வாறு இருக்கின்றது என்று தேடிப் பார்த்த போது மீண்டும் காதுகளில் ஒலித்த நியாயமான கேள்விதான் இன்றைய தலைப்பாகிறது.<span id="more-408"></span></p>
<p style="text-align:justify;"><span style="text-align:center; display: block;"><a href="http://arivudan.wordpress.com/2010/10/31/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a-%e0%ae%85%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d/"><img src="http://img.youtube.com/vi/3h8HcC2HGYw/2.jpg" alt="" /></a></span></p>
<p style="text-align:justify;">புலி ஆதரவாளர்களுக்கும் &#8211; தமிழின ஆர்வலர்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. புலியின் வான வேடிக்கைகளுக்காகக் காசை அள்ளிக் கொடுத்து விட்டு ஏமாந்து போன புத்தி சாலிகளின் கண்களில் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஒரு சேர, மனிதர்களாகப் பார்க்கும் பண்பு வளரும் வரை அவர்கள் தமிழின ஆர்வலர்களின் வகையிலிருந்து என்றும் வேறுபட்டே இருப்பார்கள்.</p>
<p style="text-align:justify;">தமிழின ஒற்றுமை பேசுவோர் மத்தியில் அரசியல் நிலைப்பாட்டில் வேறுபாடுகள் காணப்படினும், ஆகக்குறைந்தது மனிதர்களை மதிக்கும் குறைந்த பட்ட மனித நேயத்திலாவது ஒரு குடையின் கீழ் வருகிறார்கள். ஒரு கூட்டத்தில் கூடியிருக்கும் நான்கு பேரும் நான்கு வகை அரசியல் பார்வையில் இருப்பது தான் தெற்காசியா அரசியல் வாதிகளின் பலம். இருப்பினும், புலி ஆதரவு நிலையைக் கடைப்பிடித்த, கடைப்பிடித்து வருகிற யாருக்குமே தமது வட்டத்தை விட்டு வெளியே வந்து மனிதர்களை மதிக்கத் தெரிவதில்லை, மாறாக அவர்கள் எப்போதும் தம்மை மட்டுமே நியாயப்படுத்தி வாழ்க்கையின் இன்பம் காண்பவர்கள்.</p>
<p style="text-align:justify;">முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள், அதனால் புனிதப் புலிகள் அவர்களை விரட்டியடித்தார்கள் என்று உப்பு சப்பில்லாத பிரச்சாரத்தை இன்னொரு தலைமுறையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மிகக் கவனமாக வரலாற்றை புலிகள் எவ்வாறு செதுக்கியெடுத்தார்களோ அவ்வாறே காலம் காலமாக இரவோடு இரவாக புலிகள் பாரம்பரியமிக்க ஒரு சமூகத்தை அவர்களது உரிமைகளைப் பறித்தெடுத்து வெளியேற்றினார்கள் எனும் வரலாறும் சம காலத்தில் ஏந்திச் செல்லப்படும்.</p>
<p style="text-align:justify;">புலி எனும் ஆயுதம் ஆளும் வர்க்கத்தினரின் ஆசைகளுக்கேற்ப இயங்கிய &#8220;மேல் மாடி&#8221; இல்லாத வெற்றுப் பை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும் வரை இனங்களுக்கிடையிலான முரண்பாடு எப்போதும் நிலைத்திருக்கப் போகின்றது. வடக்கின் பிராந்திய கலாச்சாரமாக இருந்தாலும், கிழக்கின் கலாச்சாரமாக இருந்தாலும், தெற்கின் கலாச்சாரமாக இருந்தாலும் தாம் வாழும் பிரதேசங்களின் கலாச்சாரத்துக்கு உரியவர்களாகவே பரந்து வாழும் முஸ்லிம்கள் இலங்கையில் காணப்பட்டாலும், தொழில் சார் வளத்தில் தனி அடையாளத்தைக் கொண்டவர்களாகவும், தமது மத நம்பிக்கையிலும் அதன் படி நடப்பதிலும் இறுக்கமான முறைகளைக் கடைப்பிடித்து வருபவர்ளாகக் காணப்படும் முஸ்லிம் சமூகத்தை நசுக்கி வெளியேற்றியதில் புலிகளை விட புலிகளை இயக்கிய &#8220;மூளைகள்&#8221; தான் நன்மையடைந்தன என்பதைப் புரிந்து கொள்வதற்கு கடை நிலை அபிமானிக்கு இன்னும் வெகு காலம் எடுக்கும்.</p>
<p style="text-align:justify;">தாம் வாழும் பிரதேசங்களில் வர்த்தகத்துறையில் கொடி கட்டிப் பறப்பது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம். அதிலும் யுத்த காலத்திலும் முஸ்லிம்கள் வடக்கில் தம் வசம் வைத்திருந்த வர்த்தகமே பின்னால் இருந்து செயற்பட்ட &#8220;மூளைகளின்&#8221; இலக்காக இருந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முடியாதவாறு பல் வேறு வரலாறுகளை புலிகள் ஏற்கனவே புகுத்தியிருப்பதனால் கடை நிலை அபிமானியைப் பொறுத்தவரை அவன் வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து இந்த வரலாற்றுப் பிழையை மூடி மறைக்க மட்டுமே பார்க்கிறான்.</p>
<p style="text-align:justify;">வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் கருத்துக்கூறிய ஒருவர், வடக்கில் ஆகக்குறைந்தது 5000 முஸ்லிம் குடும்பங்கள் தான் இருந்தன என்று வைத்துக்கொண்டாலும், ஒரு குடும்பத்திற்கு ஒரு நண்பர் தான் முஸ்லிம் அல்லாத தமிழர்களில் இருந்திருந்தாலும், ஒரு குடும்பத்திற்கு ஒருவர் ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தாலும் ஆகக் குறைந்தது 5000 பேர் குரல் கொடுத்திருப்பார்களே? 5000 பேர் குரலை இரண்டு மணித்தியாலத்திற்குள் புலிகளால் கூட அடக்கியிருக்க முடியாதே? என்று தனது விசனத்தை வெளியிட்டமையை , எமது முந்தைய பதிவொன்றில் மேற்கோள் காட்டியிருந்தோம்.</p>
<p style="text-align:justify;">இதை ஆராயும் போது, சகோதரத்துவமும் மனித நேயமும் ஆயுத முனையில் எவ்வாறு திசை திருப்பப்பட்டது எனும் சூற்சுமத்தையும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு சற்றும் குறையாமல் தமது சகோதரத் தமிழனையே அவன் மாற்று இயக்கத்தில் இருந்த ஒரே காரணத்திற்காகப் புலி டயரில் இட்டுக் கொளுத்திய போதும் தமிழர் சகோதரத்துவம் பார்த்துக்கொண்டு இருந்தது மாத்திரமன்றி, தீ யிடுபவன் களைப்பை நீக்க சோடாவும் ஊற்றிக்கொடுத்தது எனும் உண்மையையும் சேர்த்தே புலி ஆதரவாளன் உணர்ந்து கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align:justify;">இவற்றை திறந்த மனதுடன் பார்ப்பவர்களைத் தவிர வேறு யாராலும், புலியின் கொடூரம் எவ்வாறு மனிதத்துக்கு எதிராக செயற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அவர்கள் தமது பாழுங் கிணற்றிலிருந்து வெவ்வேறான பரப்புரைகளை மட்டுமே முன் வைக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக தமது தரப்பை நியாயப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களாக நினைப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">இலங்கையில் சமூகவியல், தமிழ் &#8211; சிங்கள &#8211; முஸ்லிம் &#8211; கத்தோலிக்க &#8211; பறங்கிய இனங்கள் என்று தான் நமக்குப் பாடம் சொல்லித்தந்திருக்கிறது, ஒற்றுமை பற்றிப் பேசும் போது தமிழ் &#8211; சிங்கள &#8211; முஸ்லிம் எனும் மூவினம் பற்றித்தான் பேசுகிறது. இலங்கையின் தொன்று தொட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட சமூகவியலைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் எப்போதும் தனி இனமாகவே அவதானிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">கலாச்சார ரீதியாக தாம் வாழும் இனங்களோடும் அவர்களது விழுமியங்களோடு ஒன்றிணைந்து வாழ்பவர்களாக இருந்தாலும் கூட பண்பாட்டு ரீதியாகத் தனி அடையாளத்தோடு வாழ்வது அவர்கள் இவ்வாறு தனியான இனமாக அவதானிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணமாகக் கூட இருக்கலாம். காலி &#8211; மாத்தறைப் பிரதேச முஸ்லிம்களும், கத்தான்குடி &#8211; வாழைச்சேனை முஸ்லிம்களும், பதுளை &#8211; பிபிலை முஸ்லிம்களும் தம்மைப் பண்பாட்டு ரீதியிலும் பழக்க வழக்கங்களிலும் ஒன்றாகக் கண்டு கொண்டாலும், கலாச்சாரத்தில் அவர்கள் தத்தமது பிரதேச ஆளுமைக்குட்பட்டவர்களாகவும் , இப்பிரதேசங்களில் மொழியையே தமது தாய் மொழியாகவும் கொண்டிருக்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">எனவே இலங்கையில் அவர்கள் மொழி ரீதியாக அடையாளப்படுத்தப்படவில்லை, மாறாக தனித்துவமான ஒரு இனமாகக் கணிப்பிடப்படுகிறார்கள், பெரும்பாலான முஸ்லிம்களும் தம்மை முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவார்களே தவிர தமிழர்கள் என்று இலங்கையில் குறிப்பிடுவதில்லை, ஏனெனில் இலங்கையில் தமிழர்கள் என்றால் அது பெரும்பாலும் இந்துக்கள் எனும் தோற்றப்பாடு நிலவியதும், அதுவே ஆயுத,அதிகார முனைகளில் நியாயப்படுத்தப்பட்டதும் தான் காரணம்.</p>
<p style="text-align:justify;">சகோதரத்துவம் துண்டாடப்பட்ட வடுக்கள் காய்வதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பதை மீண்டும் நினைவூட்டிய கேள்விதான் கழற்நி வீச நாங்கள் என்ன செருப்பா? என்று ஒரு இஸ்லாமியப் பெண்மணி இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் பகுதி நேர தொலைக்காட்சி சேவையொன்றின் விபரணப் படத்தில் முன் வைத்திருக்கும் உணர்வு பூர்வமான நியாயங்கள்.</p>
<p style="text-align:justify;">எமது உடைமைகளையும், உரிமைகளையும் இழந்து விரட்டப்பட்ட கொடூரம் பசுமரத்தாணியாக எமது நெஞ்சில் இன்னும் பதிந்திருக்கிறது என்று அவர் கூறும் நியாயங்களுக்கு எதிராக புலி விசுவாசிகள் அப்படியானால் &#8220;தமிழர்கள்&#8221; விரட்டப்படவில்லையா என்ற அரசுக்கெதிரான கேள்வியையும், கிழக்கில் இடம் பெற்ற தமிழ் &#8211; முஸ்லிம் கலவரங்கள் என்று விபரிக்கப்பட்ட மோதல்களையும் முன் வைத்து நியாயம் கேட்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">ஆரம்ப கட்டத்தில் உரிமைக்கெதிரான போராட்டத்தை பொதுவான போராட்டமாக நினைத்து தோளோடு தோள் நின்ற ஒரு சமூகத்தை சந்தேகக் கண்ணோடும், இரண்டாந்தர நிலையிலும் வைத்து நடத்தியலிருந்துதான் புலிகளின் இன பேதத்துக்கான அடிப்படை ஆரம்பித்திருந்தது. புலியிலிருந்து விலகினாலும் பொது எதிரியின் பார்வையில் ஆயுதம் தூக்கிய போராளியாகவே பார்க்கப்படப்போகும் அவர்கள் பின்னர் ஈபிஆர்எல்எப் , ஈரோஸ் போன்ற அமைப்புகளோடு மாத்திரம் ஒற்றுமையாக இருக்க முடிந்தது எப்படி எனும் கேள்விக்கு அடிமட்ட புலி விசுவாசியடம் விடை இருக்கப் போவதில்லை.</p>
<p style="text-align:justify;">இருந்தாலும் தமது நிலையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இவர்களும் &#8220;துரோகிகள்&#8221; என்று மழுப்பப் பார்ப்பார்கள். மாற்று இயக்கங்களைத் துரோகிகளாக வர்ணிக்கும் படலம் எப்போது ஆரம்பித்தது எனும் வரலாறு தெரியாத முட்டாள்கள் தான் இவ்வாறு நியாயங் கற்பிக்க முடியும். இனக் கலவரம் தமது இருப்புக்கு மிகப் பெரிய ஆயுதம் என்பதை பல தடவைகள் புலிகள் கிழக்கு மாகாணத்தில் நிரூபித்திருந்தாலும், நாடளாவிய ரீதியில் அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்த விடக்கூடாது என்பதில் சந்திரிக்கா அரசு முதல் இன்றைய மகிந்தா அரசுக்கள் வரை மிகக் கவனமாக செயற்பட்டதன் விளைவு என்ன என்பது 2009 மே மாதம் நிரூபிக்கப்பட்டு விட்டது.</p>
<p style="text-align:justify;">மேடையேறி உசுப்பேற்றிய தமிழரசுக் கொள்கையாளர்களும், பெடியன்கள் வருவார்கள், ஆயுதம் தூக்குவார்கள் என்று இளைஞர்களைக் குறி வைத்துத்தான் தமது இலட்சியத்தை முன்னெடுத்தார்கள், புலிகளும் வலி மூலத்தினையும் விரக்தியையும், பிரிவினையையும் ஊட்டி வளர்ப்பதன் மூலமே தமது இயக்கத்தின் மீதான புறக்கவர்ச்சியைத் தங்க வைத்துக் கொண்டார்கள். 1980 இலிருந்து 1990 வரை இயக்கங்களில் இணைந்து கொண்ட பெரும்பாலானோருக்கு ஏதோ ஒரு வகையில் இவ்வாறான வலி இருக்கத்தான் செய்தது.</p>
<p style="text-align:justify;">தமது பலத்தை நிரூபிக்க ஆயுதம் தூக்க முடியாத ஒரு சமூகம் அரசியலைத் தெரிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இருக்கும் போது, ஆயுதத்தின் மூலம் எவ்வாறான மனிதக் கேடுகளை நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை கொடூரத்தின் உச்ச கட்டமாக ஆலயங்களில் தொழுது கொண்டிருந்தவர்களின் பின்னால் நின்று உலகறிய அரங்கேற்றியவர்கள் புலிகள். எனவே அவர்களிடம் நியாயம் எப்போதும் பேச்சளவில் தான் இருக்கும் என்பதையும் அவர்களது கடை நிலை விசுவாசி அறிந்து கொள்வதற்கு மேலும் பல வருடங்கள் ஆகும்.</p>
<p style="text-align:justify;">இது போல எமக்கும் நடந்தது என்று ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களைக் கொண்டு நியாயப்படுத்தும் விசுவாசிகள் பொது எதிரியால் தமக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தம்மோடு ஒன்றிப்பிணைந்த ஒரு சமூகத்துக்கு தண்டனை கொடுத்தது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி கேட்க மறுப்பது அவர்கள் புலி மூளைகள் ஏன் இன்னும் அப்படியே இருக்கப்போகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.</p>
<p style="text-align:justify;">30 வருட ஆயுதப் போராட்டத்தில் முஸ்லிம்களை விரட்டியடித்த வரலாறு 20 வருடங்களுக்கு முன்னரே இடம்பெற்று விட்டது என்பதையும் திட்டமிட்டு மறுதலிப்பது அவர்களது அறிவீனமே தவிர வேறு ஒன்றும் இல்லை.</p>
<p style="text-align:justify;">இலங்கையில் பிரபாகரனுக்கு முந்திய இன மோதல்களில் தமிழ் &#8211; முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒருவொருக்கொருவர் உதவியாகவே இருந்திருக்கின்றனர். 1983 கலவரத்தின் போது காடையர்களின் தாக்குதல்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முஸ்லிம்களால்தான் காப்பாற்றப்பட்டனர், அதே போன்று அதற்கு முந்தைய கலவரங்களில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்குத் தோள் கொடுத்தது தமிழர்கள் தான். இந்நிலைகள் அனைத்திலும் மாத்திரமன்றி அண்மைய சுனாமியின் பின்னான பேரழிவுகளின் போதும் மனித நேயத்துடன் தமது சகோதர இனத்துக்குக் கை கொடுக்க முஸ்லிம்கள் ஓடிச் சென்ற வரலாறும் பதிவாகித் தான் இருக்கிறது.</p>
<p style="text-align:justify;">ஆக, புலிப் பாசிசம் ஒன்று தான் தமிழ் &#8211; முஸ்லிம் எனும் பிரிவினை வேருக்கு தமது அரசியல் வங்குரோத்தின் காரணமாக பசளையிட்டு வளர்த்ததே தவிர, வேறு யாரும் இல்லை. சந்தர்ப்ப வாதக் காடையர்கள் அல்லது சமூக விரோதிகள் எல்லா இனத்திலும் இருப்பார்கள், அவர்கள் மூலம் இடம் பெறும் சிறு சிறு விடயங்களைப் பயன்படுத்தி அல்லது உருவாக்கி அதன் மூலம் பயன்பெற நினைத்துத் தோல்வி கண்டதும் புலிகள் தான் என்பதற்கு சான்றா நவீன சமுதாயம் வளர்ந்து வருவது பொறுக்க முடியாமல் பழைய பல்லவியைப் பாடி சுய இன்பம் காண விளையும் புலி விசுவாசிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align:justify;">அரசியல் காழ்ப்புணர்வுகளும், வேறுபாடுகளும் மனிதருக்கு மனிதர் வேறு படும் விடயங்களாகும். அவற்றை மாற்றி ஒரு உண்மையான சமூகக்கட்டமைப்பின் பால் செல்வதற்கு எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது சிறந்த வழியென்று நினைக்க புலி விசுவாசிகளையன்றி வேறு யாராலும் நினைக்க முடியாது.</p>
<p style="text-align:justify;">எவ்வாறாயினும், தமது சொந்த மண்ணிலிருந்து வெறும் 500 ரூபாயோடு விரட்டப்பட்ட சமூகத்திற்கு தமது உணர்வுகளை வெளியிட உரிமையுண்டு, அவர்கள் சொந்த மண்ணில் மீளக்குடியேறவும் சுமுகமான வாழ்வும் வாழ்வதற்கு உரிமையுண்டு எனும் நியாயம் புரிந்து கொள்ளப்படுவது மாத்திரமன்றி அவர்களது தனித்துவத்தைப் பேணும் உரிமையை மறுப்பதற்கோ அல்லது அவர்கள் சாராத பண்பாட்டுக்குள் அவர்களைத் திணித்து அடையாளப்படுத்துவதற்கோ வேறு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://arivudan.wordpress.com/2010/10/31/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a-%e0%ae%85%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d/"><img src="http://img.youtube.com/vi/Xr-y_C8YVhc/2.jpg" alt="" /></a></span>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/408/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=408&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2010/10/31/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a-%e0%ae%85%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அரசியல் குத்தாட்டம்</title>
		<link>http://arivudan.wordpress.com/2010/10/22/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2010/10/22/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 22 Oct 2010 11:47:29 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=398</guid>
		<description><![CDATA[அரசியல் குத்தாட்டங்களை காலத்திற்குக் காலம் அரங்கேற்றி, யார் கெட்டாலும் தமது இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்படும் ஒரு சமுதாயம் இருக்கும் வரை, அந்த சமூகத்திற்கான விடிவைப் பற்றி சிந்திக்கும் அக்கறை எந்த ஒரு அரசியல் தலைமைக்கும் இருக்கப் போவதில்லை. இந்த உண்மையை தமிழ் பேசும் நல்லுலகம் உணர்ந்து கொள்ளாத வரை தீர்வு என்பது வெறும் பேச்சளவில் மாத்திரமே இருக்கப் போகிறது என்பதை மகிந்த ராஜபக்சா சொல்லித்தான் புரிய வேண்டிய நிலையில் சாதாரண மக்கள் இல்லை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=398&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">அரசியல் குத்தாட்டங்களை காலத்திற்குக் காலம் அரங்கேற்றி, யார் கெட்டாலும் தமது இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்படும் ஒரு சமுதாயம் இருக்கும் வரை, அந்த சமூகத்திற்கான விடிவைப் பற்றி சிந்திக்கும் அக்கறை எந்த ஒரு அரசியல் தலைமைக்கும் இருக்கப் போவதில்லை.<span id="more-398"></span></p>
<p style="text-align:justify;">இந்த உண்மையை தமிழ் பேசும் நல்லுலகம் உணர்ந்து கொள்ளாத வரை தீர்வு என்பது வெறும் பேச்சளவில் மாத்திரமே இருக்கப் போகிறது என்பதை மகிந்த ராஜபக்சா சொல்லித்தான் புரிய வேண்டிய நிலையில் சாதாரண மக்கள் இல்லை என்றாலும், இன்னும் இருபது வருடங்கள் சென்றாலும் அரசியல் வாதிகள் இதை உணரப்போவதில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.</p>
<p style="text-align:justify;">திருடர்கள் எல்லோரும் திடீரெனத் திருந்தி, நான் திருடவில்லை அவன் மட்டும் தான் திருடினான் என்று கூறுவது எப்பேற்பட்ட நகைச்சுவை என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மாத்திரம் விளங்கக்கூடிய விடயம்.</p>
<p style="text-align:justify;">இணையத்தில் இன்று பரவலாகக் காணப்படும் பிள்ளையானின் அரசியல் குத்தாட்டமே இன்றைய நமது தலைப்பிற்கு அடிப்படைக் காரணமாகும்.</p>
<p style="text-align:justify;">இது வெறும் பிள்ளையானின் குத்தாட்டமாக மாத்திரம் கணிக்கப்பட முடியாத ஒரு விடயம், ஏனெனில் நாளடைவில் இலங்கை அரசியலைப் பொறுத்த வரை இப்படியான குத்தாட்ட வீரர்கள் திரை மறைவிலும், சில வேளைகளில் பிள்ளையான் போன்று திரைக்கு வெளியிலும் எப்போதும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.</p>
<p style="text-align:justify;">விடுதலைப் புலிகளின் காலத்தில் அரங்கேறிய &#8220;புத்தி சாதுர்யமான&#8221; வரலாற்றுக் காவியங்கள் கொண்டு வந்த சமூகப் பிளவுகளையும் அரசியல் வெறுமையையும் மேலும் வலுப்படுத்தும் நிலையில் இருந்து இலங்கை தமிழ் அரசியல் வாதிகள் மாறி வருவதற்கு எடுக்கப்படப்போகும் கால இடைவெளியில் மகிந்த இராச்சியம் பலம் மிக்கதாக வேரூன்றியிருக்கும்.  அந்த நிலையில் மீண்டும் சமூக முன்னேற்றம் பற்றிய ஒப்பீடுகள் இன்றைய கால கட்டத்தில் இருந்த அதே அளவுடன் , தரப்படுத்தக் கூடியதாகவும் , பின் தங்கியதாகவும் காணப்படும் அவலத்தின் பொறுப்பை இன்றைய அரசியல் தலைமைகள் தார்மீகப் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.</p>
<p style="text-align:justify;">அவர்களைத் தொடர்ந்து வரப்போகும் அவர்கள் வாரிசுகளும் வரலாற்றுத் தவறுகளை எடை போட்டு, அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளத்தயாராக இருக்கப்போவதில்லை, அதற்கான அடிப்படைக் காரணம் விரும்பியோ விரும்பாமலோ திணிக்கப்படப் போகும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள்.</p>
<p style="text-align:justify;">இன்றைய நிலையில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கலைவதிலோ அல்லது ஒற்றுமையான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலோ அரசுக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ, விடுதலைப் புலிகளின் அரசியல் ஞானம் தவறு என்று கண்டறிந்து வெளியேறியதாகக் கூறும் பிள்ளையானுக்கோ அவரது முன்னாள் குரு கருணா அம்மானுக்கோ அல்லது தமிழ் கூத்தமைப்பின் முன்னாள் தியாகிகளுக்கோ இருக்கப் போவதில்லை.</p>
<p style="text-align:justify;">இதில் கே.பியும் விதி விலக்காக இருக்கப் போவதில்லை என்பது அண்மைய அரங்கேற்றங்களில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள். முன்னாள் &#8220;அவர்&#8221;  திடீரென &#8220;இவராக&#8221; மாறுவதென்பது சாத்தியமற்ற சமூகச் சிக்கல் என்பதை கே.பி க்கும் நன்றாகத் தெரியும், அவரை ஆதரித்து இன்று பிரச்சாரப் பீரங்கிகளாக மாறியிருக்கும் அவரது விசுவாசிகளுக்கும் நன்கு தெரியும்.</p>
<p style="text-align:justify;">மக்களின் வறுமையையும், இயலாமையையும் பயன்படுத்தி உருவாக்கிக் கொள்ளும் அரசியல் தோற்றத்தினால் எதுவரை பயணிக்க முடியும் என்பதை மகிந்தா சகோதரர்களும் வெளியுலக அரசியல் அவதானிகளும் நன்கறிவார்கள்.  கே.பி உட்பட இலங்கையின் அரசியல் வாதிகள் இதை அறிவார்களா என்பது கேள்விக்குறியே.</p>
<p style="text-align:justify;">நல்லிணக்கத்தைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் தமது இருப்பைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதனால் உலகிற்கு நல்லுபதேசம் செய்யும் நிலையில் வைத்து தமது பொறுப்பான அரசியலை மகிந்த சகோதரர்கள் செய்யும் வழியையும் இவர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள் எனும் உண்மையை உணரும் போதே, நம்மிடையே காணப்படும் அரசியல் வெறுமையின் ஆழம் நமக்குப் புரிய வேண்டும்.</p>
<p style="text-align:justify;">பதவிகளும்,புகழ்ச்சிகளும் இணைந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் கடினமாக உழைக்கும் குத்தாட்டக்காரர்களை மீண்டும் ஆட்சியல்அமர்த்தும் தவறை அடுத்த தடவையும் மக்கள் எவ்வாறு செய்யப்போகிறார்கள் என்பதை காலம் நமக்கு எடுத்துச் சொல்லும் அந்த நேரத்தில் சாதாரண மக்களின் அரசியல் மயப்படுத்தப்பட்ட வேற்றுமைகளை இனங் காண்பது மிகக் கடினமாக அமையும்.</p>
<p style="text-align:justify;">மக்களுக்கும் குத்தாட்ட மகேசன்களுக்குமான இடைவெளியை அதிகரித்து வைப்பதே தீர்வில்லாத சமூக அரசியலின் அடிப்படை என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் அரசியல் தலைமையும் அதன் வெளிநாட்டுப் பங்காளிகளும் மேலும் இரண்டு தசாப்தங்களுக்கு உரிமை வழங்கல் எனும் பெயரில் அடக்கியாளும் திறனை வளப்படுத்திக் கொள்ளும் அதே வேளை சமூக வேறுபாட்டு ஏற்றத் தாழ்வுகளை இலங்கைத் தீவில் சாதி,மத பேதமின்றி அரங்கேற்றுவார்கள்.</p>
<p style="text-align:justify;">எதிர்காலத்தில் இதன் விளைவுகள் அனைத்து சமூகங்களுக்குள்ளும் இருக்கப்போகிறது என்பதை நியாயப்படுத்துவதன் மூலம் மீண்டும் மீண்டும் அரசியல் குத்தாட்டம் மேலோங்கி வளர்வதும் அரங்கேறத்தான் போகிறது.</p>
<p style="text-align:justify;">இருந்த நிலையை விட நல்ல நிலை எனும் விளக்கத்திற்குள் அடங்கிப் போகும் மக்கள் ஒரு பக்கம் இருக்க, ஆட்சியாளர்களின் சுகபோக அரசியலில் தமது உரிமைகளை விட்டுத்தொலைத்து விட்டு மீண்டும் அனாதராவாகத் தவிக்கப்போகும் எதிர்கால அரசியல் நிலையை எண்ணிப் பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.</p>
<p style="text-align:justify;">அப்படியான எதிர்கால நிலை உருவாகும் போது, அதைத் தடுக்கும் வழி காட்டலையோ அல்லது முன் மாதிரியையோ உருவாக்கத் தவறும் எந்த ஒரு இன்றைய அரசியல் வாதியும் மக்களுக்காகப் போராடப் போவதில்லை என்பது திண்ணம்.</p>
<p style="text-align:justify;">இது கே.பிக்கும் பொருந்தும், கருணா அம்மான், பிள்ளையான், கூத்தமைப்பு, அமைப்பின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் மக்களை கோரப்பிடியில் வைத்து பல தசாப்தங்கள் பின் நோக்கிக் கொண்டு சென்று மண்டியிட்டு மடிந்து போன பிரபாகரனுக்கும் பொருந்தும்.</p>
<p style="text-align:justify;">இவர்கள் அனைவரும் தமது இருப்பைப் பாதுகாப்பதில் காட்டும் முனைப்பை தெளிவான அரசியல் சிந்தனையில் இது வரை வெளிக் காட்டவில்லை. எனவே மக்கள் உரிமை என்பதெல்லாம் தயவில் தங்கியிருக்கும் நிலைக்கு பின் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்குமே தவிர முன்னேறப்போவதில்லை.</p>
<p style="text-align:justify;">புதிய பாத்திரத்தில் பழைய கள்ளாக மீண்டும் மீண்டும் அதே நிலைக்கு மக்களை விட்டுச் செல்வதை விடுத்து உருப்படியாக என்றாவது எதையாவது இவர்கள் செய்ய மாட்டார்களா என்று ஏங்கும் சாதாரண மக்கள் வசதியான வீடுகளில் தான் வாழ வேண்டும் என்பதில்லை, அன்றாட உணவுக்கும் முடியாமல் இருக்கும் ஏழைக் குடிமகனிடமும் இருக்கும்.</p>
<p style="text-align:justify;">ஆனால் அதை யாரால் வெளியில் சொல்ல முடியும் என்பதே கேள்வியாகும். அதை வெளியில் சொல்லும் சுதந்திரத்தையும் அதன் பின்னான தனி மனித பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு குத்தாட்ட அரசியல் ஒரு போதும் மக்களுக்கு உதவப்போவதில்லை.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/398/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=398&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2010/10/22/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மாயமான் வேட்டை !</title>
		<link>http://arivudan.wordpress.com/2010/08/25/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/</link>
		<comments>http://arivudan.wordpress.com/2010/08/25/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 14:18:09 +0000</pubDate>
		<dc:creator>arivudan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://arivudan.wordpress.com/?p=388</guid>
		<description><![CDATA[என்று வரும் அந்நாள் என்பது தான் அடுத்த கட்ட சுவாரஸ்யம்? விடுதலைப்போர் எனும் பேரில் வயிறு வளர்த்த காட்டேறிகளின் மூன்று தசாப்த இருப்பில் பெரும் பங்கை வகித்த கே.பி அங்கிளுக்கு அது இன்று வந்து விட்டது. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, பூச்சுற்றி வேடிக்கை பார்க்க நினைக்கும் உருத்திரகுமாருக்கும் அவர் சகாக்களுக்கும் என்று வரும் என்பது தான் இனி வரும் வரலாற்று மாற்றம். தமிழீழ மாயை ? பெரும்பாண்மை அடக்கு முறையிலிருந்து விடுபட்டு வாழ, தனித்துவமும் தன்னாட்சியும் சுதந்திரமும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=388&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">என்று வரும் அந்நாள் என்பது தான் அடுத்த கட்ட சுவாரஸ்யம்?</p>
<p style="text-align:justify;">விடுதலைப்போர் எனும் பேரில் வயிறு வளர்த்த காட்டேறிகளின் மூன்று தசாப்த இருப்பில் பெரும் பங்கை வகித்த கே.பி அங்கிளுக்கு அது இன்று வந்து விட்டது.</p>
<p style="text-align:justify;">மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, பூச்சுற்றி வேடிக்கை பார்க்க நினைக்கும் உருத்திரகுமாருக்கும் அவர் சகாக்களுக்கும் என்று வரும் என்பது தான் இனி வரும் வரலாற்று மாற்றம்.<span id="more-388"></span></p>
<p style="text-align:justify;"><strong>தமிழீழ மாயை ?</strong></p>
<p style="text-align:justify;">பெரும்பாண்மை அடக்கு முறையிலிருந்து விடுபட்டு வாழ, தனித்துவமும் தன்னாட்சியும் சுதந்திரமும் வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளாத தமிழர் ஒரு காலத்தில் இல்லையெனும் அளவுக்கு தமிழீழத்தின் ஈர்ப்பு மக்களிடத்தில் ஆழ ஊடுருவி இருந்த காலத்தில், அதிகார மிலேச்சைத்தனத்தின் உச்ச கட்டமாக ஒரு சுய நலக்கும்பலின் நாசகார செயற்பாடுகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி அழிக்கப்பட்ட, அடியோடு அகற்றப்பட்ட ஒரு உன்னதமான கனவு தமிழீழம் என்றால் அது மிகையாது.</p>
<p style="text-align:justify;">இந்தக் கனவின் உன்னதம் அறிந்து கை கோர்த்த எத்தனையோ பெரும் புள்ளிகள் நாளடைவில் அரசியல் எதிர்காலம் இல்லாத வங்குரோத்து நிலையினை நன்குணர்ந்து தம்மை விலக்கிக்கொண்ட வரலாறும், அரசியல் திட்டமற்ற அரக்கப் போக்கினை சகிக்க முடியாமல் விலகிக்கொண்ட வரலாறும் சிறு பிள்ளையும் அறியும்.</p>
<p style="text-align:justify;">பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உணர்வில் குடிகொண்ட தமிழீழக் கனவை முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் முடிக்கும் வரை நடந்த ஒவ்வொரு அநாகரீகமும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் போது, தமிழீழம் எனும் கனவு மாயையாகிப் போய் இன்று எல்லையும் இல்லாமல், நிலமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையெல்லாம் யாரால் வந்தது என்ற ஆராய்வு தேவையற்ற நிலையை அடைந்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது.</p>
<p style="text-align:justify;">இந்தக் கால மாற்றத்தின் போது, எவ்வாறு உருவான ஒரு தமிழீழ உணர்வு மாயையாகிப்போனதோ அவ்வாறே அதை உருவாக்கிய காரணியும் தேய்ந்து போனது எனும் உண்மையை தமிழீழத்தை அந்தரத்தில் வைத்து அழகு பார்ப்பவர்கள் ஒருக்காலமும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.</p>
<p style="text-align:justify;">அடக்கு முறை சர்வாதிகாரத்தில் அரசியல் முன்னெடுத்த பெரும்பாண்மையினம் தேய்ந்த அதே நேரத்தில் திட்டமேயில்லாத ஆயுதப் போராட்டத்தை அரசியல் மயப்படுத்திக்கொண்டு சென்றதன் விளைவை அப்போது அறிய மறுத்த புத்திஜீவிகள் இப்போது மட்டும் வீறு கொண்டு எழுவது வேடிக்கையானது.</p>
<p style="text-align:justify;">அதன் அடிப்படையில் வைத்துப் பார்க்கும் போது, &#8220;அவர்&#8221; இருக்கும் வரை புத்தி ஜீவிகளை சிந்திக்கக் கூட இடங்கொடுக்காமல் விட்டு விட்டார் என்று, இன்று &#8220;அவர்&#8221; மீது இவர்கள் சேறு பூசும் மறைவான நாடகம் தான் இப்போது நடந்தேறுகிறது என்பதை அறிய மறுக்கும் கடை நிலை பக்தனுக்கு எதைச் சொன்னாலும் ஏறப்போவதில்லை. காலம் பதில் சொல்லாமலும் விடப்போவதில்லை.</p>
<p style="text-align:justify;">ஒரு சமூகத்தைக் கட்டியாளும் கவர்ச்சிகரமான தலைவர்கள் எப்போதாவது தான் பிறப்பார்கள், அப்படியொரு தலைவன் தனக்குக் கிடைத்த வழிகளைக் கொண்டு மக்களுக்கு நல்லது செய்வதை விடுத்து, தன் இருப்பையும் மூன்று தலைமுறையினரையும் எவ்வாறு அழித்தொழிக்க முடியும் என்பதற்கு &#8220;அவர்&#8221; காரணமோ இல்லையோ அவரைச் சுற்றியிருந்து தம்மை வளப்படுத்திக் கொண்ட இவர்கள் தான் மிகப் பெரும் காரணிகள்.</p>
<p style="text-align:justify;">இன்றளவும் தமிழ் மக்களை முட்டாளாக்குவதன் மூலம் இவர்கள் எதைச் செய்யப் போகிறார்கள் என்பதை இன்று கேள்வி கேட்கும் முக்கியமான நபராக கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் மாறியிருக்கிறார் என்று ஒத்துக் கொள்ள மறுப்பவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.</p>
<p style="text-align:justify;">மாற்றப்பட்டது தான் உண்மை என்று எடுத்துக்கொண்டால் கூட, இப்படி நிலை தடுமாறுபவர்களைத் தான் உங்கள் சூரிய குமரன் அருகில் வைத்துக்கொண்டிருந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள், அதை ஏற்றுக் கொள்ளும் மறு கணம் இப்போது அந்தரத்தில் தமிழீழம் காட்ட வந்திருக்கும் இவர்கள் நிலை தடுமாறப் போவதில்லை என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்?</p>
<p style="text-align:justify;">அண்மைய ஒளிப்பதிவுகள் வெளிவரும் வரை கே.பி எப்படியிருப்பார் என்பதே வெறும் ஊகமாகத்தான் பெரும்பாலனவர்க்கு இருந்தது, அப்படியிருந்த ஒரு நபர், அதுவும் பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்த இந்த கே.பி க்கே உங்கள் வாதப்படி இப்படியான நிலை தடுமாற்றம் என்றால் சும்மா வரும் பணத்தில் மில்லியேனர்களாக இருக்கும் அமெரிக்க புத்திஜீவிகளுக்குள் எப்போதோ இந்த மாற்றம் வந்திருக்க வேண்டும், ஆனால் அது எப்போது பகிரங்கமாகும் என்பது மட்டுமே இன்றைய கேள்வி.</p>
<p style="text-align:justify;">சுற்றி வளைக்கப்பட்ட தலைவனைக் காப்பாற்ற மில்லியன் கணக்கில் பணத்தை விரயப்படுத்த விரும்பாத சீருடைச் சருகுப் புலி பற்றியெல்லாம் கே.பி தகவல் தருகிறார், வெள்ளை வேட்டியில் இருக்கும் தமிழ் நாட்டு நரிகளின் கதைகளும் இனி வரும் காலத்தில் முழுமையாக வெளிவரக் காத்திருக்கிறது, இத்தனைக்கும் மேலாக நாட்டுக்கு நாடு அவை வைத்து அந்தரத்தில் பாராளுமன்றம் கட்டி அதில் இல்லாத தமிழீழத்தை ஆள நினைக்கும் குமரர்களுக்கு என்ன பங்கு இருக்கப்போகிறது என்பது காலம் சொல்லப் போகும் உண்மைகள்.</p>
<p style="text-align:justify;">உணர்ச்சியூட்டல் ஆயுதம் புறக்கணிக்கப்படும் வரை கிடைக்கும் 10 யூரோவையும் விடப்போவதில்லை இந்த முடிசூடா மன்னர்கள்.</p>
<p style="text-align:justify;">எப்போது கடைநிலை பக்தன் தான் கொடுத்த ஒரு காசுக்கும் கணக்கு கேட்க ஆரம்பிப்பானோ அப்போது துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மீண்டும் தமிழீழ உணர்வை அந்தரத்தில் விட்டு விட்டு இவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.</p>
<p style="text-align:justify;">இதன் இடைவெளியில், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்திலிருந்து அந்நியப்பட்ட ஒரு மக்கள் சமூகம் நிலத்தில் உருவாவதை கே.பியாலும் தடுக்க முடியாது.</p>
<p style="text-align:justify;">கடந்த வருடமே &#8220; <strong><a title="நிரத்தரதரமாக தொடுக்குக சமத்துவமா? அடிமைத்தனமா?" href="http://arivudan.wordpress.com/2009/07/01/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be/">சமத்துவமா? அடிமைத்தனமா?</a> <span style="font-weight:normal;font-size:13px;">&#8221; என்று தலைப்பிட்டு ஒரு பதிவை மேற்கொண்டிருந்தோம். அங்கு உருவாகப்போகும் ஒரு புதிய சமூகக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்களது பிரதான தேவையான வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றம் புலியோ இந்தப் புளுகர்களோ அற்ற நிலையில் வந்தடையத்தான் போகிறது.</span></strong></p>
<p style="text-align:justify;">அதை எவ்வாறு குழப்புவது என்பது மட்டுமே இந்தக் குருடர்களின் செயற்திட்டங்களில் காணப்படப்போகிறதே தவிர, சமஷ்டியில் சுய கொளரவத்தைப் பெற்று, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு அந்த மக்களுக்கு இவர்களால் எதுவும் செய்ய முடியாது.</p>
<p style="text-align:justify;">அரசாங்க உதவிப் பணத்தைப் பெறுவதற்காக சொந்த மனைவியையே விவாகரத்துச் செய்து விட்டதாக ஏமாற்றித்திரியும் இந்த அண்டப் புளுகர்கள் புலம் பெயர்ந்த மக்களுக்காகத்தான் தமிழீழத்தை நாடு கடத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அதை அவர்கள் தாராளமாகச் செய்து கொள்ளலாம்.</p>
<p style="text-align:justify;">ஏனெனில், இறுதியில் அவர்கள் அவை உறுப்பினர்ள் மட்டுந்தான் அந்த மாயையில் வாழப் போகிறார்கள், அது மக்களைப் பெரிதளவில் பாதிக்கப்போவதில்லை.</p>
<p style="text-align:justify;">தற்போது கிளம்பியிருக்கும் மக்கள் விழிப்புணர்வை என்ன செய்தாவது அடக்கி வைக்க வேண்டும், அவர்களை மீண்டும் உணர்ச்சியூட்டிக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் மேற்கொள்ளும் நடை பயணங்கள், போராட்டங்கள், கவனயீர்ப்புகள் எல்லாம் அந்தரத்தில் வாழத் திட்டமிருக்கும் மாயையை வளர்த்தெடுக்க மட்டுமே உதவப்போகிறதேயன்றி, இவர்களைப் போலல்லது தமது சொந்த நிலத்திலேயே இவர்களால் ஒரு புறமும் அவர்களால் ஒரு புறமும் சிதைக்கப்பட்ட வாழ்க்கையைக் கட்டியமைக்கப் போராடப்போகும் சாதாரண தமிழனுக்கு இவர்களது முட்டாள் முயற்சிகளால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை.</p>
<p style="text-align:justify;">தமிழ் சினிமாவில் தலைவனுக்காகத் தீக்குளிக்கும் தொண்டர்களைப் பார்த்துப் பழகிய பிரபாகரன் தனக்காக யாரும் வராததைக் கண்டு அவர்களைப் பலவந்தமாக இழுத்துச் சென்று பலி கொடுத்த வரலாறு இன்னும் பல நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்கும். இப்படி ஆங்காங்கே நடக்கும் சில தொண்டர்கள் தீக்குளிப்புகளுக்குப் பின்னால் கூட வறுமையும், பணமும், பல வந்தமும் விசைகளாகச் செயற்பட்டமையையும் அதே தமிழ் சினிமா எடுத்துக் காட்டுகிறது.</p>
<p style="text-align:justify;">உண்மையான பாதிக்கப்பட்ட சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்ட இந்த வேடிக்கையின் விளைவுகள் இப்போது மெல்ல மெல்ல துளிர் விட ஆரம்பித்திருக்கும் அதே வேளை தம்மைக் கட்டியெழுப்ப தம் கைகளை மாத்திரமே நம்பியிருக்கும் ஒரு சமூகமும் மெல்ல மெல்லத் துளிர் விடுகிறது.</p>
<p style="text-align:justify;">அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து உணர்ந்து கொள்பவர்கள் தம் சொந்தக் கைகளாலேயே நேரடியாக அவற்றை செய்து முடிப்பது சாலச் சிறந்தது.</p>
<p style="text-align:justify;">சிறுபாண்மை,பெரும்பாண்மை அடக்குமுறை வரலாறுகளெல்லாம் இலங்கையைப் பொறுத்தவரை கடந்த கால வரலாறுகள் ஆகிக்கொண்டு போவதைத் தடுப்பதற்கு முண்டியடிப்பதை விட பெரும்பாண்மை, சிறுபாண்மை மற்றும் இதர தரப்பினரையும் இனி வரும் காலத்தில் கட்டியாளப்போகும் வர்க்க நிலை மாற்றங்களை எதிர்கொள்வது தான் நாளைய இலங்கையின் ஒவ்வொரு குடிமகனினதும் தேவையாக மாறப் போகிறது.</p>
<p style="text-align:justify;">அவ்வாறான ஒரு நிலைக்கு நாடு மாறிக்கொண்டிருக்கும் போது மீண்டும் மீண்டும் கற்காலத்துக்கே தம் சமுதாயத்தை இட்டுச் சென்று உணர்ச்சியூட்டி மாயையில் வைத்திருக்கத் துடிப்பவர்களை காலம் தண்டிக்கும் என்பது பொறுத்திருந்து காணக்கூடிய வரலாறு.</p>
<p style="text-align:justify;">பலத்தோடு இருந்த போது கிடைத்ததையெல்லாம் தூக்கியெறிந்து உலகமே தன் காதுகளைப் பொத்திக்கொண்ட போது &#8220;மெளனித்தும்&#8221;, இன்று ஐநாவில் பிரிகேடியர் நிரந்தரப் பிரதிநிதியாகிவிட்டதன் பின்னால் &#8220;சரணடைந்ததை&#8221; ஏற்றுக்கொண்டும் தமது புத்திசாலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் இந்த புத்தி ஜீவிகளின் தமிழீழ மாயை அவர்களோடு வாழ்வதில் யாருக்கும் ஆட்சேபனையில்லை. மாறாக, கடின உழைப்பை ஆதாரமாகக் கொண்டு வாழும் அப்பாவித் தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arivudan.wordpress.com/388/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arivudan.wordpress.com/388/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arivudan.wordpress.com/388/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arivudan.wordpress.com/388/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arivudan.wordpress.com/388/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arivudan.wordpress.com/388/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arivudan.wordpress.com/388/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arivudan.wordpress.com/388/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arivudan.wordpress.com/388/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arivudan.wordpress.com/388/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arivudan.wordpress.com/388/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arivudan.wordpress.com/388/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arivudan.wordpress.com/388/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arivudan.wordpress.com/388/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arivudan.wordpress.com&amp;blog=7655915&amp;post=388&amp;subd=arivudan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arivudan.wordpress.com/2010/08/25/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/5bfe904176c779bad727349e28736047?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">arivudan</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
